Wednesday, 14 October 2015

பருப்பு குழம்பு இனி... 
ஏழைகள் வீட்டில் கறிக்குழம்பே!

பருப்பு குழம்பு இனி ஏழைகள் வீட்டில் கறிக்குழம்பே! பருப்பு விலை உயர்வுக்கு பாஜக அரசின் கொள்கையே! ஊக வணிகத்திற்கு ஊக்கம் தருகிறது முந்தைய காங்கிரஸ் அரசுபோல் பாஜக அரசும்! ஊக வணிகம் பிடியில் பிரதமர் மோடி!


ஆம்! இந்திய மக்களின் 40% பயன்பாட்டிற்கு தேவையான 40 லட்சம் டன் பருப்பு வகைகளை அதானி வகையறா பதுக்கி வைத்திருப்பதே காரணம் என்றும் புள்ளி விபரங்களும்,  தகவல்களும் தெரிவிக்கின்றன.

மோடியை எப்படி தன் சட்டைப் பையில் அதானி பதுக்கி வைத்திருக்கிறாரோ அதுபோல் பருப்பையும் தன் சட்டைப்பையில் பதுக்கி வைத்திருக்கிறார். இவருக்கு எதிராக தன் சுண்டு விரலைக்கூட அசைக்க மறுத்து வருகிறார் மோடியார்!

----\\\\

படிப்பும் போராட்டமும் வேறு வேறு அல்ல!

படிப்பும் போராட்டமும் வேறு வேறு அல்ல; இரண்டும் ஒன்றுதான்! மனித சமுதாயத்தின் வரலாறுகள் எல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே!

வரலாற்றில், சமுதாயத்தில் மாணவர் பருவம் பிரதானமானது; இளமை வளமை கொண்டது! இளமையில் கல் என்பது வெறும் படிப்பு மட்டுமல்ல; 

சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்பாட்டுக்கு, எதிர்கால வாழ்க்கை உத்திரவாதத்திற்கு போராடித்தான் ஆக வேண்டுமென்றால்... அதை செய்துதான் ஆகவேண்டும்!

இதன் ஒருபகுதி இன்று 12.10.15 PTTV மக்கள் மேடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\

பீகாரிலும் இடதுசாரிகளே மாற்று!

பீகார் சட்டமன்ற தேர்தலில் சாதி, மத வாதமற்ற, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிற இடதுசாரி கட்சிகள் அணி வரலாற்றில் முதன் முறையாக அனைத்து தொகுதியிலும் போட்டி இடுகின்றன.

இது சாதி மதம் ஊழல் அற்ற ஆட்சி அமைந்திட விழைவோருக்கு ஒரு வரபிரசாதமாக இத் தேர்தலில் அமைந்துள்ளது. இதன் வெற்றி வாய்ப்பைப் பொறுத்தே மேற்கண்ட வாதங்களின் ஆபத்தில் இருந்து அதாவது சாதி, மத வாதம் மற்றும் ஊழலில் இருந்து பீகாரை பாதுக்காக்க முடியும். 

பாஜக -லல்லு கூட்டணிகளை பீகார் மக்கள் நிராகரிக்க வேண்டும்; இடதுசாரி அணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளின் கனவாக இருக்கிறது.

இன்று 12.10.15 PTTV நேர்பட பேசு வில் இது முழுவதும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி

-----\\\\

விருதை துறப்பது தேச நலனே!

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் தேசபக்த போராட்டம் மிக நியாயமானதே! 

ஒரு பாசிச பாணி ஆட்சியைத்தான் பாஜக வினால் தரமுடியுமென இடதுசாரிகளும், ஜனநாயகம் விரும்பிகளும், மதச்சார்ப்பற்ற சக்திகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தது, இதன்மூலம் நிருபணமாகி உள்ளது. 

இனியாவது மதசார்பற்ற சக்திகள்  ஒன்றுபட்டு பாஜக அரசின் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா போக்குக்கு எதிராக குரல் ஓங்கி ஒலித்து, நாட்டு மக்களின் ஒற்றுமையை, பாதுகாப்பை உறுதிபடுத்திட, மத்திய அரசுக்கு நிர்பந்தத்தை தந்திட வேண்டும்!

மேலும் இந்துத்துவாவின் கோரக் கொடூரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

இன்று 13.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

-----\\\\

தேச நலனின் எதிர்வினையே!

அடுத்தடுத்து விருதுகளை திருப்பித் தருவது நோக்கம் கொண்டதல்ல. சாகித்திய அகடாமி விருது உயரிய விருது. இது அவர்களுக்கு பெருமை தருவது. 

இதையே திருப்பித் தருகிறார்கள் என்றால், அந்தளவுக்கு எழுத்தாளர்களுக்கும், மத சார்பற்ற அறிவுவார்ந்த மக்க்களுக்கும், பாஜக ஆட்சி ஆதரவாளர்களால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலேயே இதுமாதிரி எதிர்வினை ஆற்றுகிறார்கள். 

தேர்தல் பிரச்சாரத்தில் வெளுத்து வாங்கும் பிரதமர் ஒரே ஒரு வார்த்தை உறுதியாக பேச மறுப்பதேன். பிரதமரின் செய்கைதான் அரசியலே தவிர, எழுத்தாளர்களின் எதிர்வினை அல்ல! 

வைரமுத்து உள்ளிட்டு தமிழக சாகித்திய அகாடமி விருது பெற்ற அனைவரும் சேர்ந்து கண்டன அறிக்கை விட்டிருப்தில் இருந்தே தெரிகிறது இதில் அரசியல் விளையாட்டு ஏதுமில்லை என்று!

இன்று 13.10.15 PTTV நேர்படபேசுக்கு!

-----\\\\

பாமக பாலு 'வெலவெலத்து'ப் போனார்!

இன்று 14.10.15 PTTV  புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் பாமக பாலு; பாஜக வானதி; இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..!

விசித்திரமான விவாதமாக இருந்தது. 'இப்ப இருப்பதுபோல் தான் பொதுசிவில் சட்டம் வந்தாலும் எல்லாரின் உரிமையும் இருக்குமாம்; அச்சம் வேண்டாமாம்!' இப்படி சொல்வது வானதி. (அப்புறம் என்னா வெங்காயத்துக்கு பொதுசிவில் சட்டம்? இருக்கிற சட்டமே இருந்துட்டு போவுது!)

இதுக்கு மேல ஒன்னு சொன்னார் பாருங்க... 'தமிழகத்தில் வடமாவட்டங்களில் நடக்கும் தலித் மீதான தாக்குதலுக்கு பாமக காரணமில்லையாம்!' 

ஆம், அப்படி சொல்லவில்லை என்றால் மேற்கு மாவட்டங்களில் நடைபெறும் தலித் மீதான தாக்குதலுக்கு 'கொங்கு' காரணம் இல்லையா? என்று பாலு கேட்டால் 'வம்பு' வந்து சேர்ந்துவிடும் என பவ்வியமாக வானதி பாமக க்கு 'அப்படி பாமகவை சொல்ல முடியாது' என்ற  அர்த்தத்தில் சொல்லி... 'சர்டிபிகேட்' கொடுத்து, ஜாதி விவகாரத்தில் "அடக்கி வாசித்து"க் கொண்டார்கள் இருவரும்!

மத நல்லிணக்கம் கெடுவதற்கு பாஜக காரணம் என்றால், சாதி நல்லிணக்கம் கெடுவதற்கு, குறிப்பாக தலித் மீதான தாக்குதலுக்கு பாமக வின் பிரச்சாரம் காரணம் இல்லாயா? என்ற கேள்விக்கு , "திருடனுக்கு தேள் கொட்டியது" போல் பாமக பாலு 'வெலவெலத்து'ப் போனார். சபாஷ்! ஜென்ராம் அவர்களே!

-----\\\\

மின்வாரிய அதிகாரி அத்துமீறலைக் கண்டித்து 
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! 
*****  ***** ****** ******
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் செக்காரப்பட்டியில், வேலாசாமி செட்டியார் ஸ்கூல் அறக்கட்டளை நில குத்தகை விவசாயிகளுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் பேர்வழிக்கு ஆதரவாக செயல்பட்ட மின்வாரிய வெள்ளாப்பட்டி இளநிலை பொறியாளரைக் கண்டித்தும்,

இனிமேலும் சட்டத்துக்கு விரோதமாக செயல்படக் கூடாது என்றும் இன்று 14.10.15 கருப்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை: 
பி.அரியாக்கவுண்டர் (வட்டத்தலைவர்) 
கண்டன உரை: 
பி.தங்கவேலு (சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழுச் செயலாளர்), எஸ்பி.தங்கவேல் (மாவட்டச்செயலாளர் விச),
விகே.வெங்கடாசலம் (விதொச மாவட்டத்தலைவர்), 
கே.ராஜாத்தி (மாதர் சங்க மாவட்டச் செயலாளர்).

எம்.தங்கராஜ், எம்.சின்ராஜ், ஒய்.பார்வதி, பி.மணி, என்.ஈஸ்வரன், மணியன், பி.குருநாதன், வி.கிருஷ்ணன், எஸ்.ரகுபதி, ஆர்.வெங்கட், ஆர்.முத்துசாமி, எம்.மோகன் உளளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.

----\\\\

அப்துல் கலாம் கனவு நனவாவதென்பதும் கனவே! 

2020இல் இந்தியா வல்லரசு ஆவதென்ற கனவை, பன்னாட்டு முதலாளிகளின் பொற்பாதங்களில் மத்திய அரசு சமர்பித்துவிட்டதில் இருந்து இது தெரிகிறது.

எங்கும், எதிலும் இந்தியாவில் பன்னாட்டு மூலதனம் நுழைந்துவிட்ட சூழலில், சொந்த பலத்தை இழந்துவிட்ட சூழலில் எப்படி இந்தியா வல்லரசு ஆகமுடியும்?

முதலில் நல்லரசுக்கே வழியில்லாமல், மதவாத அரசாக மாறி வருகிறது சகிப்புத்தன்மையின்றி! ஆகவேதான் கலாமின் கனவு கனவாகவே போய்விடுமென்று தெரிகிறது!வேண்டுமென்றால் தபால் தலை வெளியிடலாம் ; அவ்வளவே!

இன்று 14.10.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\

பிரதமர் வேதனை தெரிவிக்க இத்தனை நாட்களா?

தாத்ரி படுகொலை செய்யப்பட்டு, எத்தனை நாட்கள் ஆகின்றன; பிரதமர் வேதனை தெரிவிக்க இத்தனை நாட்களா?

டுவிட்டர் பிரதமருக்கு டூர் போகவே நேரம் சரியாக இருக்கிறது; இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை இவ்வளவு பெரிய நாட்டில், எதிர்கட்சிகள்தான் அரசியல் ஆக்குகின்றன என்று இதுவரை கூவி வந்தவர்கள், இப்பொழுது என்ன சொல்லப்போகிறார்கள்?

அப்படியென்றால் பிரதமர் சொல்வதுதான் "வேதவாக்கா?". ஆக நரேந்திர மோடி ஆட்சி வேதனை மிகுந்த ஆட்சி என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார் என்று அர்த்தம் கொள்ளலாமா?அல்லது வேற்றுமையில் ஒற்றுமையை சகிக்க முடியாத ஆட்சி மோடி ஆட்சி என்று அர்த்தம் கொண்டால் தவறாகுமா?

எதிர்கட்சிகள் மதவாதத்தை தூண்டுகிறதென்றால், ஒபாமாவையும் சேர்த்துத்தான் சொல்கிறாரா? ஒபாமா இந்தியா வந்தபொழுது இதைத்தானே சொன்னார்!

மத சம்பிரதாயங்களை அரசியல் ஆக்குவதே பாஜகவும், ஆர்எஸ்எஸ் ம்தான்; எதிர்கட்சிகள் அல்ல!

இன்று 14.10.15 PTTV நேர்பட பேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\

பரிகாரம் செய்யாமல், பரிகாசம் செய்வது ஏன்?

இன்று 15.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் வெங்கடேஷ், மணி ஆகியோர் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டில் (சாகித்திய அகடாமி எழுத்தாளர் 22 விருதை துறந்தது; பிரதமர் சகவாசமாக வாய்திறந்து, போனா போவுதென்று 'துரதிஷ்டம்' என சொன்னது; நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன்; நீ அழுவதுபோல் அழுஎன்கிற பாஜக, ஆர்எஸ்எஸ் நாடகத்தை) அம்பலப் படுத்தினர்.

ஆனால் பாஜக நேரடி பேச்சாளர் இல்லாததால், அவர்களின் சார்பில் நெறியாளர் ஜென்ராம் பேசினார். அதைப்பற்றி கூட ஒன்றுமில்லை; ஆனால் அவர் ஒரு போடு போட்டார் பாருங்கள்...

"இடதுசாரி, வலதுசாரி, நடுசாரி" என எதுவும் கிடையாது என்று! ஏன் அப்படி டென்ஷன் ஆனார் என்றே தெரியவில்லை!

திருவாளர்கள் வெங்கடேஷ், மணி ஆகியோர், "பிரச்சனை வந்துள்ளது; அதை பிரச்சனையாக பார்த்து, பரிகாரம் செய்யாமல், பரிகாசம் செய்வது ஏன்?" என்று அருமையாக வாதிட்டனர். நன்று. நன்றி!

-----\\\\

அரசியல் என்பது 'அடல்ஸ் ஒன்லி' அல்ல!

அரசியல் என்பது 'அடல்ஸ் ஒன்லி' அல்ல; அது மனித இனத்திற்கு அவசியமானது இன்றைய சூழலில்!

18 வயதுக்கு ஓட்டுரிமை இருக்கும்போது, தன்னை ஆள தகுதியான அரசை தேர்வு செய்ய வேண்டுமானால், அரசின் செயல்பாடுகளை அதன் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ளாமல், எப்படி சுயமாக வாக்கு அளிப்பது?

நம்மை ஆளும், ஆள வாக்களித்து அனுப்பும் கட்சி, அதன் ஆட்சி, அதன் கொள்கை போன்றவற்றை தெரிந்து கொள்வதுதான் அரசியல்!  இது மாணவர்களுக்கு வேண்டாம் என்றால் யாருக்கு வேண்டும்?

இதே ஸ்டாலின் சிறிது நாள்களுக்கு முன் மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்றவர்தான்! இப்பொழுது 'இப்படி' பேசுவதில் வியப்பேதுமில்லைதான்!

மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்பதும் ஒருவித அரசியலே! அரசியலால் என் படிப்பும், வாழ்வும் வீணாக போய்விட்டதென்று கூறும் ஒருவர் நாட்டில் உண்டா?  இது மாணவர்கள் மீதான பற்றல்ல; பயத்தில்தான்!

இன்று 15.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

2016 தேர்தலில் வலுவான அணி!

அதிமுக, திமுக க்கு மாற்றாக 2016 தேர்தலில் வலுவான அணி அமைவதற்கான பிரகாசமான சூழல் தற்போது கனிந்து வருகிறது.

மக்கள் நல கூட்டியக்கம் இன்னும் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே தெரிகிறது. இதன்  குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கும் பணி முடிந்து,

அது அதிகாரப்பூர்வமாக வெளியான பின் நிச்சயம் இந்த அணிபலப்படும் என்பது உறுதி! அதேபோல் திமுக அதிமுக மீது மக்களின் வெறுப்பு மிக அதிகமாகவே உள்ளது;

அதனால் தேமுதிக, தமாக போன்ற ஜனநாயக கட்சிகள் "மக்கள் நல கூட்டியக்க" த்தில் இணைந்திடுதே தமிழக மக்களுக்கு செய்திடும் பெரும் நன்மையாகும்!

இதன் ஒருபகுதி இன்று 15.10.15 PTTV நேர்படபேசு வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

---\\\\

பாரதிராஜா பேச்சு அபத்தமானது; ஆபத்தானது!

பாரதிராஜா பேச்சு அபத்தமானது; ஆபத்தானது!
தமிழர்தான் நடிகர் சங்கத்திற்கு தலைவர் ஆக வேண்டுமென்றால், அது எவ்வகை நியாயம்?

இவரின் பேச்சில் சுயநலம் கொடிக்கட்டி பறக்கிறது. இவரின் மகன் உள்ளிட்டு நடித்த, நடிக்கிற திரைப்படங்களுக்கு தமிழர் அல்லாத நடிகைகள் வைத்து "காசு" பார்க்கலாம்; ஆனால் அவர்கள் சங்கத்திற்கு நிர்வாகிகளாக வரக்கூடாதா?

இந்த டிஜிட்டல் உலகில் அவரின் இனிய தமிழ் மக்களுக்கு தரும் இந்த "வாய்ஸ்"  புறக்கணிக்கத் தக்கது; நிராகரிக்க தக்கது; பாரதிராஜா "பாய்ஷன் ராஜாவாக" மாறாமல் இருப்பதே தமிழகத்திற்கு நன்று; தமிழ் திரை உலகுக்கும் நன்று!  

 இன்று 16.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு ஆய்வுக்குரியதே!

"நீதிதுறை ஆணையம் தேவை" என்கிற 'நீதிபதி நியமனம் சட்டத்தை' செல்லாதென உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு ஆய்வுக்குரியதே!

நீதிதுறை ஆணையம் தேவையே;  அதன்மூலம் நீதிதுறையில், நீதிபதி நியமனத்தில் ஜனநாயகப் படுத்த இயலும் என்பது கடந்த கால அனுபவமாக இருக்கிறது.

என்றாலும், அதில் பன்னாட்டு முதலாளிகள் நலன், இந்துத்துவா திணித்தல் என்ற இரு அம்சங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ  "செல்வாக்கு" செலுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.

எனவே விழிப்புடன் இருந்து "அவற்றை" அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வது ஜனநாயக சக்திகளின் முக்கிய கடமையாக இருக்கிறது.

அப்படித்தான் இந்த தீர்ப்பையும் பார்க்க வேண்டி உள்ளது.

இன்று 16.10.15 PTTV நேர்படபேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\

இதற்கு பெயர்தான் 'செருப்படியோ?

இன்று 16.10.15 PTTV இல் காலை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் , சிபிஐஎம் இரா.சிந்தன், திமுக ஜெயராஜ், நெறியாளர் ஜென்ராம்..! இரவு மக்கள் மேடை நிகழ்ச்சியில் சுபவீ., திரைத்துறை கௌதமன், இனியன் சம்பத், நெறியாளர் வேங்கடபிரகாஷ்..!

இந்த இரு நிகழ்ச்சியிலும் பொதுவான ஒரு விவாதம் இருந்தது. அதாவது பாரதிராஜாவின் ஒர் அறிக்கை... அதில், "தமிழர் தலைமை வரவேண்டும்!" இதை எதற்காக சொன்னார். நடிகர் சங்க தேர்தலுக்காக கொடுத்த "வாய்ஸ்". இது சரியா? இது சரியல்ல; நோக்கம் சார்ந்தது என்று காலை சிந்தனும், ஜெயராஜ் தெளிவுபட கூறிவிட்டனர்.

ஆனால், இரவு விவாதத்தில் வந்த சுபவீ., இனியன் சம்பத் ஆகியோர், "அதை இப்ப சொல்லியிருக்க வேண்டாம்; சங்கத்தில் நடந்த ஊழலை மறைக்கு உத்தி இது" என்றனர். கௌதமன் எதிர் பார்த்தப்படி பாரதிராஜா பட்டுகுஞ்சம் விரித்தார்.

நெல்லை, திருச்சி, கோவை அரங்கங்களில் இருந்து விவாதித்தவர்களும் ஆதரித்தும், எதிர்த்தும் பேசினர். ஆனால், சுபவீ., அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு யாரிடமும் (பாரதிராஜாவை ஆதரிப்பவர்களிடம்) இருந்து எந்த பதிலும் இல்லை; ஒரு பாரதிராஜா இந்த நிகழ்ச்சியை பார்த்தோ, அல்லது யாராவது பார்த்தவர்கள் சொல்லியோ அவர் "என் இனிய தமிழ் மக்களுக்கு" பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.

"இவ்வளவு பேசினாரே இவரின் ஒரு திரைப்படத்தில் ஒரு தமிழ் பெண்ணைக் கதாநாயகி ஆக்கினாரா? இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளானபோது, எந்த இனவாதம் தமிழர்களை அழித்து குவித்தோ அந்த சிங்கள இனத்திற்கு சம்மந்தப்பட்ட பெண்ணைத்தானே இங்கே தமிழ்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்கள்; அப்பொழுது எங்கே போனது தமிழர்பாசம்?"

இதற்கு பெயர்தான் 'செருப்படியோ?'

'காசுபணம்' பார்க்கும் 'பிஸ்னஸ்'சில் தமிழருக்கு கண்ணீர் ஒரு சொட்டுகூட வடியாது போலும்!?. வேண்டாம் துவேசம் பாரதிராஜாவே; வேண்டும் மக்கள் ஒற்றுமை பாரதிராஜாவே!

------\\\\\

"ஆன் லைன் னா?" "அமெரிக்கா லைன் னா?"

அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பது புரிகிறது! ஆனால், அரசு நிர்வாகத்தில் 'ஆன்லைன்' முறையை புகுத்தினால், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்பதும், அரசு நிர்வாகத்தில் ரகசியம் காக்க வேண்டிய அவசியம் இல்லை' என்பதும் புரியவில்லையே!

-பிரதமரின் இந்த பேச்சில் வெளிப்படைத் தன்மை இல்லையென எனக்கு தோன்றுகிறது! ஆம், நம் நாட்டுக்கென்று எந்த ரகசியமும் தேவையில்லை; ஆன்லைன் என்ற பெயரில் "அமெரிக்கா லைன்" ஆக்கிவிடலாமென பிரதமர் சொல்லுவதுபோல் தோன்றுகிறது!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம் பிரதமர் வாயே திறக்க மாட்டார்; அப்படி திறந்தால்... ஒன்று பன்னாட்டு செல்வந்தர்கள் நலன் இருக்கும்; இரண்டு இந்துத்துவா நலன் இருக்கும்; இவருக்கும் வெளிப்படை தன்மைக்கும் எந்த ஏணி வைத்தாலும் எட்டாது!

----\\\\

Saturday, 10 October 2015

தமிழக காவல்துறை... 
இனி மினிஸ்டர் ஒயிட் போட்டுக் கொள்ளலாம்!

இன்று 10.10.15 PTTV நேர்பட பேசுவில் கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளி யுவராஜ், ஓய்வு ஐஜி திலகவதி, அதிமுக சரஸ்வதி, காங்கிரஸ் கீதா, திக ஓவியா... இவர்களுடன் கார்த்திகைச்செல்வன்..

முதல்கரடி: 01 யுவராஜ்க்கும் கோகுல்ராஜ் கொலைக்கும் சம்மந்தமில்லை யாம்; ஆனால் நாளைக்கு 11.10.15 சரன்டராக போகிறாராம். 

கரடி 02: அதிமுக விஷ்ணுப்பிரியா இரங்கல் தெரிக்கனுமின்னு அவசியமில்லை; இதெற்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கிறதாம் அதிமுக வேலையா? என்கிறார் சரஸ்வதி.

கரடி 03: விஷ்ணுப்பிரியா மரணம் குறித்து மவுனம் நிலவுதாம்; திக ஓவியா கருத்து; சிபிஐஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி  விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு சிபிஐ விசாரனை கோரியது; வீட்டு சென்று ஆறுதல் சொன்னது எதுவும் இவங்களுக்கும், நெறியாளருக்கும்கூட தெரியல; ஆனால் நேற்று இவர் திமுகவுக்கு ஆதரவாக, கம்யூனிஸ்ட்க்கு எதிராக பாய்ன்டுகளை எடுத்து எடுத்து கொடுத்தார்.


கரடி 04: காங்கிரஸ் முதன்முதலில் சிபிஐ விசாரனை கேட்டதாம்; பிரியா உடல் சேலம் ஜிஎச் இருக்கும்போது, சிபிஐஎம், விசிக, பகுஜன் போன்றவை சேலத்தில் சிபிஐ விசாரனை கேட்டு மறியல் செய்தது இவருக்கு தெரியாது போலும் கீதாவுக்கு.

கரடி 05: பெண்கள் அமைப்பு வீரியமாக போராடவில்லையாம் பிரியா விசயத்தில்; சரி, அஇஜமாதர் சங்கம் இவருக்கு தெரியாதது சோகமே; இவரினியாது தெருவில் இறங்கி, மகேஸ்வரி போல் போராட வருவார?

கரடி 06: தமிழக காவல்துறை காக்கிச்சட்டையை கலட்டிவிட்டு, யுவராஜ் போல் மினிஸ்டர் ஒயிட் போட்டுக் கொள்ளலாம்.

கசிய விடுவது தமிழக காவல்துறைதான்!.

விஷ்ணுப்பிரியா சந்தேக மரணம் குறித்த தனிப்பட்ட விசியங்களை கசிய விடுவது தமிழக காவல்துறைதான். வேறு யாரு? விஷ்ணுப்பிரியா இறந்த தகவல் கிடைத்ததும், பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே போய் " அனைத்து ஆவணங்களை" கைப்பற்றியது காவல்துறைதானே! அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் உள்பட முதலில் தந்ததும் காவல்துறைதானே! 

பெண்கள் மட்டுமல்ல தலித் மக்கள் பிரச்சனைகளை அணுகுவதில் குறைபாடு உள்ளது. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதில் அரசியல் எல்லாம் கிடையாது. மரணம் நிகழ்ந்த காவல்துறை அதிகாரிகளே விசாரித்தால் நிச்சயம் நியாயம் கிடைப்பது மட்டுமல்ல உண்மை வெளியவே வராது. 

யுவராஜ் சரணடைந்தாலோ, உயிரோடு பிடிக்கப்பட்டாலோ தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முன்னேற்றம் கிடைக்கும். ஆனால்  வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரனையில் முன்னேற்றம் கிடைக்காது.

இன்று 10.10.15 PTTV நேர்படபேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில்...
 'காட்சியும், பேச்சியும்' தந்துவிட்டான்.

ஒரு வழியாக பொறியாளர் தலித் மாணவன் கொலைக் குற்றவாளி யுவராஜ் இன்று 04.10.15 காலை 08 மணி செய்தியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 'காட்சியும், பேச்சியும்' தந்துவிட்டான்.

ஸ்காலாந்து போலீஸ்க்கு மீறிய தகுதி படைத்த தமிழக போலீஸ்,  அதுவும், சிபிஐ யை எடுத்து சாப்பிட்டுவிடும் தமிழக சிபிசிஐடி போலீஸ் 3 படை, சொறி, சிரங்கு அமைத்து இரவு பகலாக தேடி வருகிறது.


சேலத்தில் தினம் தினம் யாரையாவது பிடித்து விசாரி விசாரின்னு 8 மணி நேரம் 10 மணி நேரமுன்னு விசாரித்து தள்ளுகிறது. அனேகமாக இந்நேரம் 10,000 பக்கம் விசாரனை அறிக்கை தயாரித்து இருப்பர். அம்மா போலீஸ் சும்மா இருக்குமா?

வீரப்பனுக்கு மோருல விஷம் கொடுத்து பொணத்த சுட்டு புடித்த அம்மாவின் டீம் அடிவருடி  வெள்ளதொற கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் நடத்திடும் ஜனநாயக போராட்டத்தையே சகிக்காமல் உள்ளே போடுங்கன்னு ஓப்பன் ஓயர்லஸ் ஓங்காரமிட்டானே, இப்ப என்னா பண்ணுவீங்க? மீசைய முறுக்கிட்டு பேட்டி கொடுக்கிறானே கொலைக்குற்றவாளி!


ஊடக தர்மம் வாழ்க! ஊடக உரிமை ஓங்குக! ஆமாம்..! அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போனது யாரு? தமிழ்நாட்டு போலீசா? திருட்டு பயல்களா? யாரு?

தமிழகத்தில் கிரிமினல்கள் ஆட்சித்தான் நடக்கிறது என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமா?

இன்னும் எத்தனை கோகுல்ராஜ்களை, விஷ்ணுப்பிரியாக்களை தமிழகம் காவுக் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை; தமிழகத்தின் ஆதிக்க ஜாதிகளின் ஜாதிவெறி கொலைகளைத் தடுக்க! தலித் மக்களின் சம உரிமைகளை நிலைநாட்ட?

இன்னேரம், தமிழகத்தில் நான் போலீசு மந்திரியாக இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்; டிஐஜி யாக இருந்திருந்தால்....  .... அதற்காக டிஎஸ்பி போல் தூக்கில் தொங்கிருக்க மாட்டேன்; ராஜினாமா செய்திருப்பேன்; குறைந்தபட்சம் தமிழக மக்களிடம் மன்னிப்பாவது கேட்டு இருப்பேன்! 

இது எதும் நடக்காது இந்த ஆட்சியில்!ஆனால் 2016இல் சட்டபேரவை தேர்தலில் முடிவு கட்டவில்லையென்றால், தமிழத்தை கிரிமினல்கள் தான் ஆளுவார்கள்! ஆம் மக்கள் நலக் கூட்டியக்கம் தமிழகத்தை ஆளுவதுதான் இதற்கு ஒரே தீர்வு!

Sunday, 4 October 2015

இது கேளிக்கையல்ல; மக்களின் கோரிக்கை! 

வைகோ கூற்று மிகமிக சரியே! திமுக அதிமுக ஊழல் கட்சிகளே என்ற விமர்சனம் சத்திய வார்த்தைகள். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கிறபோது 5 கட்சிகளின், 'மக்கள் நலக் கூட்டியக்கம்' தமிழகத்தில் ஏன் பிடிக்க முடியாது. நிச்சயம்  முடியும். இது கேளிக்கையல்ல. மக்களின் கோரிக்கை. 
அதிமுக திமுக மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. சரியான  மாற்று இடதுசாரிகள் உள்ளிட்டு மதிமுக, விசிக, மமக ஆகிய கட்சிகளே! ஜெயலலிதா எதிர்த்து போட்டியிட்டு சிபிஐ வாங்கி 10 ஆயிரம் ஒவ்வொரு வாக்கும் ஓராயிரத்திற்கு சமம்!

இதன் ஒருபகுதின் இன்று 3.10.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\\

மண்ணிற்கேற்ற நடைமுறையே தேவை!

எதிர்வினை: கிருஷ்ணசாமி திண்டுக்கல்: 

தோழர்களே! வைகோ கருத்துமட்டுமல்ல தேசத்தின்மீது அக்கரை கொண்ட அனைவர் கருத்தும் அதுதான். அதற்கு நாம் ஒவ்வொருக்கும் பொறுப்பு உண்டு. விதைக்கிற நாள் விருந்துக்கு போய்விட்டு அறுக்கிற நாளன்று மட்டும் வயலுக்கு போனால் நெல் நமக்குச் சொந்தமாகுமா? 

எனவே விதைக்கும் நேரம் இது. இந்தநேரம் ஐம்பெரும் கூட்டனியான மக்கள் நலக்கூட்டணி சக்தியுள்ள அனைத்து இடங்களிலும் உட்கடை கிராமம் முதல் ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி வரை அனைத்து இடங்களிலும் மக்கள் புரியும்படியான அரசியலை வீடுவீடாக கொண்டு செல்லவேண்டும். மக்களைச்சென்றடையும் நேரத்தையும் கலை வடிவங்களையும் கண்டு பிடித்துக்கொண்டு செல்லவேண்டும் ஒரே மாதிரியான வடிவம் எல்லா இடத்திற்கும் பொருந்தாது. 

மண்ணிற்கேற்ற நடைமுறை என்பதை புரிந்து கொண்டு இடத்திற்கேற்ற நடைமுறையை பின்பற்றி முன்னேறினால் வெற்றி நிச்சயமாகும். முடிவெடுக்கும் இடத்திற்கு இந்த கருத்து போக வழியேதுமுண்டா? என்பதுதான் தெரியவில்லை.

(சிபிஐஎம் வரும் தேர்தலில் அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தவிர்த்த அணிக்கு தானே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது; தற்போது மமக இந்த அணியில் இல்லை. முடிவுதான் எடுத்தாகி விட்டதே! தமிழகத்தில் 64 தொகுதியில் சிபிஐஎம் போட்டியிடுவதென்று!)

----\\\\\

 ரிசர்வ் வங்கி வேறு; மத்திய அரசு வேறோ? 

சமீபத்தில் தான் மத்திய அரசு பயிர் கடன் வட்டி 4% இல் இருந்து 7 முதல் 12.5% க்கு உயர்த்தியது; கல்விக் கடன் வட்டி 12.25% ஆக நீடிக்கிறது! ஏற்கனவே சில தனியார் வங்கிகள் வாகணக்கடன் வட்டி 0% என்று இருக்கிறது; தேசிய வங்கிகளில் வாகணக் கடனே கிடையாது; வீட்டுக்கடன் தற்போது   30 லட்சத்திற்குள் வட்டி 10.25%; 30 லட்சத்திற்கு மேல் வட்டி 12 முதல் 13% % இருக்கிறது. 

மொத்தத்தில்... வட்டியில்லாமல்கூட கடன் எவ்வளவு  கொடுத்தாலும், 
'டாக்குமெண்ட் ஃபார்மாலிட்டி' யில் இருக்கும் கெடுபிடிகளைக் (கடன் பெறுவதில் உள்ள சட்டத்திட்டங்களின் கடுமையை) குறைத்தாலே ஒழிய சாதாரண மக்கள் வங்கிகள் பக்கம் தலைகூட வைத்து படுக்க முடியாது! 

அதனால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஏட்டில் மட்டுமே இருக்கும்; ஏற்கனவே ஏற்றம் பெற்றவர்களே பலன் அடைவார்கள்; பாவப்பட்டவர்கள் ஏமாந்தே போவார்கள்!

இன்று 30.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

வண்டவாளம் தண்டவாளத்தில்!

மின்சாரம், போக்குவரத்தில் ரூ13 ஆயிரம் கோடி இழப்பு அல்லது நட்டம் என சிஏஜி கூறி இருப்பது... 

ம்பரதாயமாக தெரிந்தாலும்,  நிச்சயம் இது தாக்கத்தை  ஏற்படுத்தவே செய்யும்; இது ஆளும் அரசுகளின் 'வண்டவாளத்தைத் தண்டவாளத்தில்' ஏற்றிட உதவுகிறது அல்லவா? 

நம் தமிழ்நாடு மக்களின் "பேதமற்ற" டாஸ்மாக் வருமானமும் இல்லாமல் இருந்திருந்தால் 'அம்மா' திட்டங்கள் எல்லாம் 'கம்மா' கரையில் அடித்து செல்லப்பட்டு இருக்கும் போல் தெரிகிறது. 

அரசு துறை இழப்புக்கு ஆளும் கட்சிகளின் கொள்கைதான் காரணம்; அதிகாரிகள் ஒரு நபர்கூட ஆளும் கட்சி அமைச்சர்கள் கிழிக்கும் கோட்டை தாண்டுவதில்லை; அப்படி தாண்டினால், அவர் கெதி "அதோ கெதிதான்!" 

நிலைமை தமிழகத்தில் இவ்வாறு இருக்கும்போது, அதிகாரிகள் எப்படி பொறுப்பாக முடியும்?

இன்று 30.9.15 PTTV நேர்பட பேசுக்கு!

----\\\

முதலில் மோடியை மீட்க வேண்டும்!


கறுப்பு பணத்தை மீட்பதாக சொன்ன மோடியை வெளிநாட்டில் இருந்து மீட்க வேண்டிள்ளது.

சிபிஐஎம் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி சாடல்!

ஆணவக்கொலை எதிர்ப்பு கடலூர் சிறப்பு மாநாட்டில் உரைவீச்சு...! 
(நன்றி: 01.10.15 தமிழ் இந்து)

----\\\\

'அந்த' ராமர வரச்சொல்;

கெளம்பிட்டாங்கய்யா...!
கெளம்பிட்டாங்க..!
வாழும் 'ராமர்'கள் குழாய்க்குள் குடியிருக்கிறார். 

வாழ்ந்ததாக கூறும் 'ராமர்' க்கு இப்ப வீடு இல்லீன்னா  'குடி' யா மூழ்கிப்போய்டும்?

'அந்த' ராமர வரச்சொல்; இந்த ராமர்களோடு வாழச்சொல்!

-----\\\\\

கருணாநிதி உலறுவது வீண்! ஏன்?

அதிமுக அப்படித்தான் நினைக்கும்! ஆடுகள் எல்லாம் தனித்தனியாக இருந்தால் ஓநாய்க்கு லாபம்தான்! 

அதிமுக இப்பொழுது மேயும் ஆடு; திமுக ஏற்கனவே அதிமுகபோல் தனியே மேய்ந்த ஆடு! சிவப்பு ஆடுகளை தவிர சில ஆடுகள் மேய்வது உமக்கு மட்டும் பட்டாவா? எங்களுக்கு பங்கு வேண்டாமா? என உரிமை கொண்டாடுகின்றன; "பங்கு கொடுக்கிறேன்" என பெருந்தன்மையின்றி இப்படி கருணாநிதி உலறுவது வீண்.

ஆனால் தற்போது மேய்வது (ஆளுவது) ஆடல்ல; ஆடு தோலணிந்த ஓநாய்! திமுக ஆடா? ஓநாயா? அதை பொறுத்தே அணியமையும்! பந்து கருணாநிதி கையிலே!

முயல் ஆமை கதை தெரியுமா? அதிமுக, திமுக இரண்டுக்கும் மாற்றாக தற்போது 'மக்கள் நலக்கூட்டியக்கம்' சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது. 

ஒரு பிரபல நாளிதழ் கருத்து கணிப்பில் சிபிஐஎம், சிபிஐ, மதிமுக, விசிக, மமக அணிக்கு தற்போதே 31% வாக்குபலம் இருக்கிறதென்று சொல்லி இருக்கிறது. ஆகவே ஆட்சி அமைக்க போவது 2016 இல் 'மக்கள் நலக் கூட்டியக்கமே!

இன்று 01.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

-----\\\\\

தும்சம் செய்தது அமெரிக்கா!
இந்தியா ஒத்துழைக்குமா? 

இலங்கை போர் குற்றம் விவகாரத்தில் "ஐநா ஐநா ஐநா" என அங்கலாய்த்து கொண்டன தமிழக கட்சிகள்! ஈராக்கை, ஆப்கனை போன்ற நாடுகளை ஐநா என்ற தடியை வைத்துதான் அடித்து தும்சம் செய்தது அமெரிக்கா என்கிற ஒநாய்! இன்று உலக நாடுகளில் அதன் விஷம் பரவிக் கொண்டுத்தான் இருக்கிறது. 

அன்று முதல் இன்று வரை சிபிஐஎம் ஒன்றுதான் அமெரிக்கா புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும் உருப்படியானதாக சரித்திரம் இல்லை என்று. ஆனால் அமெரிக்கா இலங்கை பிரச்சனையில் ஐநா வழியே நல்லது செய்யுமென தமிழக கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் நம்பின. ஆனால் புலி பசித்தாலும் புள்ளைத் தின்னாது, அது மாமிசம் தின்னும் என்பதை இப்போதாவது தெரிந்துக் கொண்டால் சரி. 

அமெரிக்கா எள்ளு என்றால் எண்ணையாக வரும் பாஜக அரசா, அமெரிக்காவுக்கு உத்தரவு போட போகிறது? காமன்வெல்த் விசாரணையாவது நடக்குமா? அது நடந்தால்கூட பரவாயில்லை என்பதுதான் தற்போதைய நிலை! அதற்கு இந்தியா ஒத்துழைக்குமா? 

இன்று 1.10.15 PTTV நேர்படபேசு நிகழ்ச்சியில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\

"வருமான வரித்துறை 'வருமானம்' தேடி வரும்"

ஊருக்கு இளைத்தவர்கள் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது எங்கள் பகுதி சொலவடை. 

பாவம் சினிமா காரர்கள். அதிலும் சூப்பர் ஸ்டார்கள் வீடுகள் எல்லாம் தெரியாது இந்த வருமான வரிதுறைக்கு. 

அதுபோல ஆளும் கட்சி தலைவர்கள் வீடுகளும் தெரியாது இந்ததுறைக்கு. 
விஜய் ரசிகர்களை இழுக்கும் வேலையிது. தேர்தலுக்குள் இன்னும் எங்கெங்கெல்லாம் போவார்களோ? தெரியவில்லை! 

மற்ற "புள்ளிகள்" எல்லாம் ஒழுங்கா போய் ஆளும் கட்சிக்கு தேர்தல்நிதி என்கிற பெயரில் "கப்பம்" கட்டிவிட்டால் தப்பித்தீர்கள். இல்லையென்றால் இந்த "வருமான வரித்துறை 'வருமானம்' தேடி வரும்" துரைமார்களே வரும்! ஜாக்கிரதை!

இன்று 2.10.15.PTTV மக்கள் மேடைக்கு!

------\\\\\

கருணாநிதி மஞ்சள் துண்டின் மகிமை?!

ஸ்டாலின் கோவிலுக்கு போனது இப்பொழுது; ஆனால் கருணாநிதி மஞ்சள் துண்டின் மகிமையை கண்டுபிடித்தது எப்போது? 

ராமானுஜம் சீரியல் வருவதெல்லாம் சீரியஸ்சாக எடுத்துக் கொள்ளலாமா? ஈய்யத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை; அதிமுகவுக்கு விமர்சிக்கும் உரிமை இருப்பதாக தெரியவில்லை! 


தமிழ் மக்களில் அவர்களின் (அதிமுக) கணக்குபடி ஒன்னரை கோடி குடும்பங்களை, ஜெயலலிதாவை "விடுதலை கோரி, பக்தகோடி" ஆக்கிவிட்டு திமுகவை விமர்ச்சிப்பதில் பொருளில்லை! 

அதைவிட கொடுமை என்னவென்றால், திமுக அதிமுக இரண்டுமே "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று அண்ணா சொன்னார் என்று கூறி 'தப்பித்துக்' கொள்வதோடு பழியை, பாவத்தை அண்ணா மீது போட்டுவிட்டு 'சும்மா' இருந்துக் கொள்கிறார்கள். 

ஸ்டாலின் கோவிலுக்கு சென்றது தேர்தல் உத்தி மட்டுமல்ல, பக்தியும்தான்! நமக்கு நாமே பயணம் மக்களையும், கூட்டணிக்கு கட்சிகளையும் கவர்ந்திழுக்கும் உத்தி என்பதைவிட தந்திரம் எனலாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் முயற்சி. இது பலிக்காது. 

இன்று 2.10.15 PTTV நேர்படபேசு நிகழ்ச்சியில் இதன் ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\\