Monday, 31 October 2016

ஆடு நனையுதே என்று ஒநாய் அழுகிறதா?
மனுநீதியை பொதுசிவில் சட்டம் கட்டுபடுத்துமா?


கடந்த ஒரிரு நாட்களாக நம் நாட்டின் பிரதமரின் உரை கவலை மிக்கதாகவும், ஆர்ப்பரிப்பு மிக்கதாகவும் செய்தித் தாள்களை அலங்கரித்த வண்ணம் இருக்கின்றன. இதைப் படித்த எவரொருவரும் உலகத்திலேயே மிக உயர்ந்த பெண்ணுரிமைப் போராளி நமது பிரதமர்தான் என்று முடிவுக்கு வந்துவிட்டால ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்தளவுக்கு வெளுத்து வாங்குகிறார் என்று தான் சொல்ல தோன்றும். ஆம், இதுதான் இவரின் சொந்த முகமா? அல்லது முகமூடி முகமா? மோடி முகம்என்று பார்ப்போமா?

அதாவது தலாக்முறையால் முஸ்லீம் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்களாம்; அதை அனுமதிக்க முடியாதாம்; அதோடு பெண்சிசு கொலையையும் அனுமதிக்க முடியாதாம்! அடுத்து பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறையையும் இந்த அரசு பார்த்துக் கொண்டு இருக்க முடியாதாம். இது இவரின் பேச்சின் சாரம். இது எப்படி இருக்கிறதென்றால், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதக் கதைபோல் இருக்கிறது அல்லவா?
நமது பிரதமர் பிதற்றுகிறார்

தலாக் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் பெண் சிசுக் கொலையைப் போலவே பெண்களுக்கு எதிரான செயல்பாடுதான். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம்என்கிறார். இது காவிரிக்கும், பாகிஸ்தானுக்கும் பொருந்தாது போலும்.
மேலும் தொடர்கிறார்… ‘தலாக் விவகாரத்திலும், மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. ஆனால் ஒரு சிலரோ அது குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைக்கு வராமல் மக்களை தூண்டி விடும் நடவடிக்கைக்களில் ஈடுபட்டு வருகின்றனர்என எச்சரிக்கும் வகையில் கூறுகிறார். மேலும் கூறுகிறார்… ‘முஸ்லீம் பெண்களின் உரிமைகள் பாதுகாகப்பட வேண்டுமா? அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமா? என்பதற்கு நீங்கள்தான் (மக்கள்) பதில் கூற வேண்டும்’. அப்படி என்றால் உபி மக்கள் பாஜக வுக்கு ஒட்டு போட வேண்டும் அல்லவா பிரதமரே?

அடுத்து தொடருகிறார்… ‘தலாக் விவகாரத்தை சில கட்சிகள் அரசியல் ஆக்குக்கின்றனஎன உபி தேர்தல் பிரச்சார தயாரிப்பு கூட்டத்தில் நீட்டி முழங்குகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் முசாபர் நகரில் மூண்ட கலவரம் போல் மீண்டும் மூள முடிச்சு போடுகிறார்; நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்களைப் பார்த்து கேட்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? சீண்டி விடுகிறார் என்றுதானே அர்த்தம்.

இதற்கு மேலும் சொல்கிறார் பாருங்கள்… ‘அற்ப ஆதாயத்திக்காகவும், வாக்குக்காகவும் அக்கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன. ஊடகங்களும் இந்த விவகாரத்தை மதரீதியாக அணுகுகின்றன’. என்னேதேசப்பற்று பாருங்கள். இன்னும் அவர் உதிர்த்த முத்துக்களை கேளுங்கள்… ‘ஹிந்து-முஸ்லீம் பிரச்சனையாகவோ, பாஜக-முஸ்லீம் அமைப்புகளின் பிரச்சனையாகவோ இதை கொண்டு செல்லக் கூடாது; பெண்ணுரிமையைப் பறிக்கும் தலாக் நடைமுறை இருக்கலாமா? வேண்டாமா? என்ற கோணத்தில் விவாதம் நடத்த வேண்டும். தலாக் என்ற பெயரில் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்க்கையை பாழாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’. அடேய் சாமி..!
இவர் முதல் அமைச்சராக இருந்தபோது 2002இல் நடந்த கலவரத்தில் முஸ்லீம் கற்பினி பெண் வயிற்றை ஒரு பெண்ணைக் கொண்டே சூலாயுதத்தால் கிழித்து, அந்த முஸ்லீம் பெண் வயிற்றில் இருந்த சிசுவையும் எடுத்து நெருப்புக்கு தீணியாக்கியவர்களை, தாய்யையும் சேய்யையும் தீ ஜுவாலைக்கு பலியாக்கியவர்களைத் தண்டிக்காமல், உலா விட்ட உத்தமர்தான் இவ்வாறு பேசுகிறார். அதோடு அந்த கலவரம் முடிந்ததா? 3000க்கும் மேலான முஸ்லீம் ஆண் பெண்களை கொன்று குவித்த ஆட்சியின் முதல்வராக இருந்தவர் அல்லவா இவர்.

ஒருவேளை இவ்வண்ணம் பேச மோடியாருக்கு தகுதி இருக்குமேயானால், அன்று அவர் குறைந்த பட்சம் தனது பதவியை விலக முன் வந்திருந்தால் கூட, ஒரு வாதத்திற்காக இதை பேச்சை ஏற்கலாம். ஆனால் அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய்தான்இனி எந்த முகத்தைக் கொண்டு நான் வெளிநாடுகளை நான் பார்ப்பேன்என்றார்.

இதற்கு மேலும் இவர் வடிக்கும் நீலிக் கண்ணீரைப் பாருங்கள்… ‘இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்று பாலின விகிதம் குறைந்துள்ளது. சமநிலையற்ற இந்த சூழலுக்கு காரணம் பெண் சிசு கொலைதான். இத்தகைய கொடுங்குற்றத்தில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மதத்தின் பார்வையில் இந்த விவகாரத்தை அணுகாமல் கடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுத்து வருகிறதுஎன நாகூசாமல் பேசுகிறார்.

அடுத்து ஒருநாள் பேச்சு… ‘வனப்பகுதிகளில் தொன்றுத் தொட்டு வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அழிக்க நினைக்க கூடாது. பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்அடப்பாவமே..! வன உரிமை சட்டம் 2006ஐ அமலாக்காமல், வனங்களை அன்னிய கம்பெனிகளுக்கு டெண்டர் விட்டுவிட்டு பேசும் பேச்சை பாருங்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் இவரின் இந்த பேச்சு

இந்த பெண்ணுரிமை போராளியின் குருபீடம்பெண்ணுரிமை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே வேறு வர்ணங்களில் இருந்த 10 கணவர்கள் இருந்து அவள் 11 வதாக பிராமணனை மணந்திருந்தால்கூட,  11 வதாக மணந்த பிராமண்ணுக்கே அவள் உரிமையானவள். மற்றவர்களுக்கு அல்ல.’

நிஷாதனுக்கு விதேகப் பெண்ணிடம் தோல் வேலை செய்கிற கார்வாரன் பிறக்கிறான்

புற்க சாதிப் பெண்ணுடன் சண்டாளன் கூடிப் பெறும் பிள்ளைக்கு சோபகன் என்று பெயர். நீதியின் முன்னிலையில் மரண தண்டனைக்கு உள்ளானவன் உயிரை வாங்கும் கொலைத் தொழில் இவனுடையது

நிகராதப் பெண்ணை சுகித்து சண்டாளன் உற்பத்தி செய்யும் அத்தியாவசாயிக்கு சுடுக்காட்டைக் காத்தல் தொழிலாகிறது

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்த செய்யுமாறு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்’ (திருமணத்தில் பிராமணன் சொல்லும் வேதமந்திரம் இது)

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என 3 றாக பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது

பெண்ணுக்குக் கல்வி கற்கும் உரிமையில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் உரிமையில்லை. பெண்ணுக்கு திருமணம் என்பது 8 வயதுக்குள்ளேயே நடைபெற வேண்டும். அதற்குள் திருமணம் நடைபெற வில்லையென்றால், அவளது தந்தைபாபவிமோசனத்திற்கானசடங்குகளை செய்ய வேண்டும்

பெண்ணேநீ குழந்தை பருவம் முழுவதும் அப்பன் சொல்வதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொல்வதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்தது முதல் உன் மகன் சொல்வதைக் கேள்
பெண்ணேஉனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள்

இப்படியே போகிறது மனுநீதி. மேலும் மனுநீதியின் வழிவந்தவர்கள் சொல்கிறார்கள்

பெண்களை நம்பாதே. அவர்கள் தங்களது பாவனைகளால், ஆழகால் உன்னை மயக்கப் பார்ப்பார்கள். அவர்களிடம் சிக்கிவிடாதே’ ‘பெண்ணும் ஒரு பொருள்தான். அவளை விற்க-வாங்க எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த ஆணுக்கு உரிமை உண்டு’ –இது ஆதிசங்கர்.

பிராமண ஸ்திரிகளும் சூத்திரர்கள்தான். அவர்களுக்கு மோட்சத்திற்கு போகும் தகுதி கிடையாது. இந்த ஜன்மத்தில் ஆணின் அடிமையாக அவளுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றினால், ஆண்டவன் அனுக்கிரகத்தால் அடுத்த ஜன்மத்தில் பிராமணனாக பிறக்கலாம். பின்னர் சொர்க்கத்திற்கு போகலாம்’ –இது ராமானுஜர்.

சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள வால்மீகியின் ஜாதி சேர்ந்தவர்களுக்கு (ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா?) ஆன்மீக அனுபவம் கிடைக்கலாம். இந்த பணி சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுளின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்பட்டதாகும்’ –இது இன்றைய பிரதமர் நரேந்திரதாஸ் மோடி.

இப்படிப்பட்ட வழியில் வந்த மோடிதான் பெண்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் அவர்களின் உரிமைக்கும் சண்டமாருதம் செய்கிறார். என்ன நடிப்பு பார்த்தீர்களா? எல்லாவற்றிக்கும் உச்சபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு தர்பாரில் உள்ள மனு சிலையில் கோல்வார்கர் எழுதி வைத்துள்ளார்… ‘எல்லோரைக் காட்டிலும் மகத்தான உச்சமட்ட ஞானம் நிறைந்த முழுமுதல் மனிதகுல சட்ட நியதிகளை அளித்தவர் மனுஎன்று.

அய்யா நரேந்திரதாஸ் மோடி அவர்களேதாங்கள் கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கும் பொது சிவில் சட்டம் மனித குல சட்ட நியதிகளை அளித்த மனுவைக் கட்டுபடுத்துமா? அல்லது மனு பொதுசிவில் சட்டத்தைக் கட்டுப்படுத்துமா? எது எதை கட்டுப்படுத்தும்? முஸ்லீம் பெண்களுக்காக குடம் குடமாக அல்லது குளம் குளமாக கண்ணீர் வடிக்கும் பாஜக இதற்கு பதில் அளிக்குமா? இந்து பெண்களுக்கு இதுபோன்ற எண்ணற்ற அடிமைத்தனங்களில் இருந்து பொதுசிவில் சட்டம் விடுதலை பெற்றுத்தருமா?

இதைத்தான் இன்றைய குடியரசு தலைவர் மிக நிதானத்துடன் இவ்வாறு பகிர்கிறார் போலும்… ‘இந்தியாவில் 200 மொழிகள், 1800 எழுத்து வடிவமற்ற மொழிகள், 7 மதங்கள் உள்ளன. இந்த வேற்றுமை இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அதனை இந்தியா கொண்டாட வேண்டுமே தவிர, இது போன்ற வேற்றுமைகளை செயற்கையாக ஒன்றுப்படுத்த முயற்சிக்க கூடாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் சாத்தியமில்லை’.

நரேந்திரதாஸ் மோடியின் ஆரம்ப 11 மாத கால ஆட்சியின் லட்சணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாடும் இவ்வாறு மதிப்பிடுகிறது. அதை இங்கே கவனப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அதன்பின்னான இன்றைய நாள் வரை அவரின் ஆட்சியின் லட்சணமும் இதுதான்.

பாஜக வின் தேர்தல் வெற்றியும், மோடி அரசாங்கம் தோன்றியதும் ஒரு வலதுசாரி தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. கார்பரேட் சக்தி மற்றும் இந்துத்துவா எனும் இரட்டை விசைகள் வலதுசாரி நகர்வுக்கு தீணி போட்டுள்ளன’.

பாஜக அரசாங்கம் ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அறிவித்து, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அன்னிய முதலீட்டிற்கு இருந்த வரம்புகளை உயர்த்தியது. காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டிற்கு இருந்த வரம்பை 49% உயர்த்தியது. ரியல் எஸ்டேட் வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு இருந்த விதிமுறைகளைத் தளர்த்தியது. இவ்வாறு பாஜக அரசாங்கம் நவீன தாராளமயப் கொள்கைகளை மிகவும் உக்ரமாக தொடர்கிறது. மத்திய பட்ஜெட் 2015-16 ரூ 69,500 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனைக்கு வழிவகுத்து உள்ளது’. (சமீபத்தில் சேலம் உருக்காலை உள்ளிட்டு 17 நவரத்தின பொதுதுறை பங்குகளை 51% தனியார் வாங்கிட தளர்த்தி உள்ளது)

இந்துத்துவா அமைப்புகள் முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குகின்றன. மறு மதமாற்றம், காதல் புனிதப்போர் போன்ற பிரச்சாரங்கள் முஸ்லீம் சமூகத்திடம் அச்சத்தையும், பாதுகாப்பின்மையும் தோற்றுவிக்கின்றன. கிறித்துவ தேவாலயங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும், வன்முறைகளும் டெல்லி உள்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறின. முஸ்லீம் மக்களின் சமூக பொருளாதார பின்தங்கிய நிலைமையும், சர்ச்சார் அறிக்கை பரிந்துரைகளும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மகாராஷ்ராவில் பாஜக தலைமையிலான அரசு கல்வியில் இஸ்லாமியர்களுக்கு தரப்பட்டு வந்த 5% இட ஒதுக்கீடு ரத்து செய்துவிட்டது. மாட்டுக்கறி உணவு மகாராஷ்ராவிலும், அரியாணாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது’.

இதெல்லாம் ஆட்சிக்கு வந்த சுமார் ஒராண்டில் நடந்தேறியவையே. ஆனால் அதன் பின்னான ஒன்னரை ஆண்டுகளில் மேலே உள்ளதைவிட பன் மடங்கு கொடுமைகள் தலைவிரித்தாடி வருகின்றன.

இதிலிருந்து மக்களை திசைத் திருப்பவே அல்லது இந்தியாவின் இதயமான மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் காவி ஆட்சியை நிறுவிடவே தற்போது பொது சிவில் சட்டம், தலாக், சிசுக் கொலை, பழங்குடி பாதுகாப்பு, துல்லிய தாக்குதல் என எல்லாவற்றிக்கும் மேலாக மீண்டும் ராமர் கோவில் என பீடிகைப் போட்டு மக்களைத் திசை திருப்பி வருகிறது மத்திய பாஜக அரசு என்றால் அது மிகையல்ல.

மோடியாரின் பாஜகவின் பொதுசிவில் சட்டத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். அது குறிப்பாக இந்து  மதத்திற்கும், அதன் நீதி-சட்டத் திட்டங்களுக்கும் பொருந்துமா? கட்டுப்படுமா? மோடியார் பூஜிக்கும் மனு நீதியும், அவர்களது தொண்டரடி பொடியாளர்களும் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்? பெண் சமத்துவத்திற்கு பெண்ணிய போராளி போல் குரல் எழுப்பும் மோடியும் பாஜகவும் இதையும் விவாதிக்க தயாரா? இந்த ஏமாற்று இரட்டைவேடம் இனி எடுபடப்போவதில்லை என்பதை மட்டும் பதிந்திடுவோமாக!

-பி.தங்கவேலு.

(ஆதாரம்: சாதி-மதம்-வர்க்கம்! –கே.வரதராஜன்; மற்றும் சிபிஐஎம் விசாகப்பட்டிணம் அஇமாநாட்டு தீர்மாணம்).
குறிப்பு: தீபாவளிக்கு முன் எழுதியது..! தீக்கதிருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

Friday, 28 October 2016

போராட்டங்களை கொச்சைப்படுவதால் மட்டுமே
காவல்துறை மேன்மையடைந்து விடுமா?
தூக்கம் கடிந்து செயல்என்ற தலைப்பில் தமிழகத்தின் முன்னாள் காவல்துறைத் தலைவரும், இந்நாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் 21.10.16 தினமணியில் ஒரு கட்டுரைத் தீட்டி உள்ளார். கட்டுரையின் முற்பகுதியில் ராணுவம், துணை ராணுவம் ஆகியவற்றின் வீரதீர செயல்களை புகழ்ந்துள்ள இவர், அந்தளவுக்கான பணியில் ஈடுப்பட்டு வரும் காவல்துறைக்கு அந்தளவுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என பதிவிட்டு உள்ளார். அதைக்கூட புரிந்துக் கொள்ள முடிகிறது. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகர்களின் உரிமை.

ஆனால் பிற்பகுதியில் தமிழக காவல்துறையின் அதன் பணிகளை, மன அழுத்தங்களை பதிவு செய்ய முற்படும்போது, நாட்டில் நடக்கும் மக்கள் நலன் காக்கும் போராட்டங்களை அதன் வீச்சுகளை கொச்சைப்படுத்தும், அதனால்தான் காவலர்கள் தற்கொலை நேரிடுகிறது என திசைத்திருப்பும் வேலையிலும் ஈடுபட்டு உள்ளார். அதோடு அதிமுக முதல் அமைச்சரின் புகழ் பாடி தனது அதிமுக மீதான விசுவாசத்தைக் காட்டி உள்ளார். அது அவரது விருப்பம். ஆனால் அதற்காக காவல்துறையின் ஆடர்லி முறைக்கு வக்காலத்து வாங்குவதுபோல் முதல் அமைச்சர் புகழ் பாடுவதேன் என்ற வினா எழுவது ஒருபக்கம். இன்னொரு பக்கம்

எதற்கெடுத்தாலும் போராட்டம். சமீபத்தில் காவிரி பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பல அரசியல் கட்சிகள் களமிறங்கின. அவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க தேர்ந்தெடுத்த இடம் ரயில் தண்டவாளம். தண்டவாளத்தில் இடையே கற்களுக்கு பஞ்சமில்லை. ஒரு பிரச்சனை ஏற்பட்டால் போலீசோடு மோதுவதற்கு கற்கள் தயாராக இருக்கும். அதனால் தான் எக்காரணம் கொண்டும் ரயில் மறியலுக்கு அனுமதி அளிப்பதில்லை. ஆனால் தடையை மீறினால்தான் போராட்டக்காரர்களுக்கு திருப்தி

சட்ட ஒழுங்கு நேர்வுகளில் போராட்டத்திற்கு காரணம் என்னவாக இருந்தாலும் காவல்துறை போராட்டக்கார்களின் எதிர்ப்பைத் தாங்கி கொள்ள வேண்டும். வசவுகளை கேட்டுக்கேட்டே செவி மரத்து விடுகிறது. அதனால் தானோ என்னமோ பொத்தி வைத்த உணர்ச்சிகள் சில சமயம் எரிமலையாக வெடிக்கிறது. மனநிலை தொய்வு அடையும் போது பொறுக்க முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

காவலர்கள் உறங்காமல் பணி செய்தால் சமுதாயம் அமைதியாக உறங்க முடியும். வீட்டிலுள்ளோர் கண் விழிக்கும் முன்னரே வெளியேறி அவர்கள் கண்ணுறங்கும் வேளையில் வீடு திரும்பும் தமிழக காவல் பணி சுமை நிறைந்தது.’ ‘அடுத்த வேளை உணவு எங்கு கிடைக்கும் என்ற உறுதி இன்றி கிடைத்ததை சாப்பிட்டு, கொடூரங்களையே பார்ப்பதால் வெறுப்புக்கும் கோபத்திற்கும் உள்ளாகி வியாதிகள் தான் எப்போதும் துணை என்று வாழும் காவலர்களின் துயர் துடைக்கும் தாய் தமிழக முதலமைச்சர்

மகாபாரதப் போரில் அதர்மத்தை அழிப்பதற்காக கண்ணன் பழி ஏற்று பாண்டவர் வெற்றிக்கு வழி வகுத்தான். சமுதாயத்தில் நீதியை நிலை நாட்ட பல நேர்வுகளில் காவல்துறை பழியை சுமக்க வேண்டியிருக்கிறது. பழி சுமந்தாலும் அதர்மத்தை அழித்து அமைதி காத்த ஆறுதல்தான் ஒரு காவலர் பணியில் மேலும் பயணிக்க வைக்கும் உந்து சக்தி’ ‘கண்ணன் வஞ்சன் என்றால் காவலனும் வஞ்சன்தான். வஞ்சித்து கயவர்களை அடக்குவதில் காக்கிச் சட்டைக்காரன் ரொம்ப கெடிக்காரன்

மேலே அவர் உதிர்த்துள்ள வார்த்தைகளை பார்த்தீர்களா? எதற்கெடுத்தாலும் போராட்டம் என போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார். போராடுவது நம் நாட்டின் அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள அடிப்படை உரிமை. போராடுபவர்கள் விளையாட்டுக்கு போராடுவதுபோல் கூறுகிறார். இவரே குறிப்பிடுவதுபோல் கடைசி கட்ட ஆயுதமாகத்தான் போராட்டம் செய்ய நேர்கிறதே தவிர போராட்டமே தொழிலாக கொண்டு யாரும் செயல்படுவதில்லை.

18.10.16 அன்றுகூட நானும் கலந்துக் கொண்ட ரயில் மறியல் போராட்டத்தில் தள்ளுமுல்லு ஏற்பட்டது. தடியடி நடந்து. காவல்துறையினரையின் வசவுக்கு பஞ்சமில்லை. சிபிஐ மாவட்டச் செயலாளர் காவல்துறையின் செயல்பாடுகளால் இடதுகால் மணிக்கட்டில் விரிசல் ஏற்பட்டு விழுந்து விட்டார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக தான் மறியல் போராட்டம் நடந்தது. மாதர் சங்க மாவட்ட தலைவர் காவலர் வசவுகளால் அர்ச்சிக்கப்பட்டார். தண்டவாளத்தில் அமர்ந்தோம். ரயில் என்ஜின் மீது நின்றோம். இதெல்லாம் ஆசையின் அடிப்படையிலா? .நடராஜன் குறிப்பிடுவதுபோல் தண்டவாளத்தில் கிடக்கும் ஜல்லிகள் எங்களைப் பார்த்து சிரித்தனவே ஒழிய, நாங்கள் அதை சீந்தவே இல்லை.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் விதி. இவர் இதை புரிந்தாரா? தெரியவில்லை. இவர் தற்போது ஒரு அரசியல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, இந்த போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பார்க்காமல், இந்த போராட்டத்திற்கு யார் காரணம் என்றதையும் குறிப்பிடாமல் போராட்டத்தைக் குறை கூறுகிறார். காவலர்களுக்காக கண்ணீர் சிந்தி, காவிரிக்கு கண்ணீர் சிந்தும் போரை எள்ளி நகையாடுகிறார். காவலர்கள் மீது அனுதாப அலையை உருவாக்க முயற்சிக்கிறார். இறுதியில்அம்மாபுகழ் பாடுகிறார். இது என்ன வகை மகாபாரதம் என தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற உத்திரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் மத்திய பாஜக அரசு அமைத்திருந்தால், தமிழகத்தில் இந்த போராட்டங்களே நடந்திருக்காது. இதை இவர் வசதியாக மறைத்துவிட்டார். காவிரிக்காக அதிமுக மட்டுமே போராடும் உரிமை பெற்றிருக்கிறது போலும். பெங்களூரு தீர்ப்பை ஒட்டி நடந்த மகாபாரதம்போல் அதிமுக தனது சக்தியை பயன்படுத்தி, தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்திருந்தால் ஒரு நொடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திருக்கும். அதை குறை கூற ஆ.நடராஜ்க்கு தைரியம் உண்டா? அதையெல்லாம் விட்டுவிட்டு போராட்டம் நடத்த தேர்ந்தெடுத்த இடம் தண்டவாளம் என கிண்டலடிப்பது எங்ஙனம் நியாயம்? தர்மம்? இதுதான் அதர்மத்திற்கு எதிரான தர்மப்போரா?

நான் மேலே குறிப்பிட்டதைப் போல், அவ்வளவும் நடந்த பிறகும் மக்கள் நலக்கூட்டணி தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் தண்டவாளத்தில் கற்கள் கிடப்பது தெரியவே இல்லை. ஒருவேளை இந்த கட்டுரையை முன்னமே எழுதியிருந்தால், அதை படித்திருந்தால் இவரின் ஆசை ஒருவேளை நிறைவேறி இருக்கலாம். ஒரு ஓய்வு பெற்ற உயர் காவல் பொறுப்பில் இருந்த பொறுப்புள்ள காவல் அதிகாரி சொல்லும் சொல்லா இது? எழுதும் எழுத்தா இது? இம்மாதம் 17,18 தேதிகளில் திமுக, மக்கள் நலக் கூட்டணி மற்றும் விவசாயிகள் நடத்திய இந்த 48 மணி நேர மறியல் போராட்டத்தில் எங்காவது இவ்வண்ணம் நடந்திருக்குமா? எதற்காக இப்படி பிதற்றுகிறார்? இதன்மூலம் என்ன சொல்ல விளைகிறார்? ஒருவேளை அவ்வண்ணம் செய்திருக்க வேண்டும் என்கிறாரா?

ஆக மக்கள் நடத்தும் பல போராட்டங்களில் கல் பறப்பது யாரால் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் தந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் நமது நன்றியை உரித்தாக்கிக் கொள்வோமாக.

காவலர் பணி கடுமையான பணி என்பதை மறுப்பதற்கில்லை. இருவேறு கருத்தும் இல்லை. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜனநாயக உரிமைகளும் இவர்களுக்கு வழங்க வேண்டும். எட்டு மணி நேர வேலை; எட்டுமணி நேர உறக்கம்; எட்டு மணி நேர ஓய்வு இவர்களுக்கு அவசியம் வேண்டும். இந்த உரிமை உலக மாந்தர்களுக்கு சும்மா கிடைத்தா? எந்த போராட்டத்தை இவர் கொச்சைப் படுத்துகிறாரோ அந்த போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர் தியாகம் மூலம் உலக மாந்தர்கள் பெற்று உள்ளனர். இன்றைக்கும் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கம் இருக்கிறதென்றால் அது கம்யூனிச இயக்கமே. அதை மேற்கு வங்கத்தில் சங்கம் அமைத்து கொள்ளும் உரிமை ஆர்டலிக்கு வேட்டு வைத்தது உள்ளிட்டு அனைத்து உரிமையும் வழங்கியதை வரலாறு பேசும்.

காக்கி உடைக்குள் குமுறும் நெஞ்சங்கள் என்று கர்ஜித்தவர் மறைந்த மார்க்சிய போராளி பி.டி. ரணதிவே. தமிழகத்தில் அன்று சங்கம் கேட்டு போராடிய நைனார்தாஸ் உண்ணாவிரதத்தை ஓடோடி ஆதரித்தவரும், சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்தவரும் தமிழகத்தின் மார்க்சிய தவப்புதல்வன் ஆர்.உமாநாத். இப்படிப்பட்ட வீர வரலாறுகளை எல்லாம் மறைத்துவிட்டு, அல்லது மங்கவிட்டு தற்போதுஅம்மாபுகழ் பாடி, கெஞ்சி பெறுவதுதான் மகாபாரதமா? அடிமையாக இருப்பதும், ஆர்த்தெழுந்து போரிடுவதும் அவரவர் உரிமை; அதற்காக போராட்டங்களை கொச்சப்படுத்துவதும், அதை கொடூரச்செயலாக சித்தரிப்பதும் என்ன வகை மகாபாராதம்?

பார் புகழும் மகாபாரதம் தொட்டு, மனித சமுதாயம் கடந்து வந்த பாதை முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுகள் என்கிறது மார்க்சியம். மார்க்சீயத்தை மறுதளிக்கும் கூறு இக்கட்டுரை பதிவுகளில் இருப்பது ஏற்க தக்கதல்ல. போராட்டம் மட்டுமே எல்லோருக்கும் புதுவாழ்வை பெற்றுத்தரும் என்பதை மட்டும் இங்கே ஆ.நடராஜ் போன்றோருக்கு பதிவிடுவோம்.

காவல்துறையை ஆளும் கட்சிகள் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டதே இல்லையா? லாக்-அப் மரணம் உட்பட காவல்துறையின் மனித உரிமை மீறல்களுக்கு அளவு உண்டா? காவல்துறை குறித்த ஆளும் வர்க்கத்தின் அணுமுறை மாறும் போதுதான், அது உண்மையில் மக்களுக்கான காவல் துறையாக இருக்கும்.

-பி.தங்கவேலு

இது எடிட் செய்யப்பட்டு, 23.01.16 தீக்கதிரில் பிரசுரம் ஆனது. நன்றி தீக்கதிருக்கு..!
‘’ஆலை வாங்கினால் சோலை இலவசமா!?’’
‘’பாரதிய ஜனதா கட்சிக்குள்ளோ, அல்லது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ளோ அவர்கள் அனைவரையும் விட உயர்ந்த இடத்தில் உள்ள அவர்களது தலைவரின் கருத்துக்கு மட்டுமே அங்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அது மட்டுமே அங்கு செல்லுபடியாகும். அங்கு பல்வேறுபட்ட கருத்துகள் என்பதற்கு இடமேயில்லை. மனித முகத் தோற்றத்துடன் கூடிய தாராளமயக் கொள்கைகளுக்கு பதில், இன்றைக்கு மக்கள் மத்தியில் அவர்கள் அமலாக்கிக் கொண்டிருப்பது மனித முகத் தோற்றத்தைப் புறக்கணிக்கக் கூடிய, ஈவு இரக்கமற்ற, கடின நவீன தாராளமயக் கொள்கைகளாகும்’’ என்கிறார் வாழும் மார்க்சீய பொருளாதார நிபுனர் பேராசியர் பிரபாத் பட்நாயக். இது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், இன்றைய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் உள்ள மிக முக்கிய வேறுப்பாட்டை மிகத் துல்லியமாக அளவிட்டு உள்ளதையே காட்டுகிறது என்றால் மிகையல்ல.


அதாவது வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பர். அதுதான் இன்றைய பாஜக ஆட்சி. பெயரளவுக்கு ஒரு கூட்டணி ஆட்சி. அது மக்களின் மனங்களில் மண் தூவுவதற்கு! ஆம், காங்கிரஸ் ஆட்சியை விட ஆயிரம் மடங்கு அடக்குமுறை ஆட்சியாக பாஜக ஆட்சி மாறியிருக்கிறது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகிறார்… ‘பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து சொல்வதோடு நீங்கள் (முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்) நிறுத்திக் கொள்ள வேண்டும்என்று மிரட்டுகிறார். ‘தலாக்என்ற ஒரு வார்த்தையை இந்திய மொழிகளில் இருந்து எடுத்து விடுவதற்காகவே வரிந்துக் கட்டிக் கொண்டு செயலாற்றுகிறார்கள். 16 வலைதளத்தில் கேள்விகளை முன்வைத்து மக்களிடத்தில் தற்போது கருத்து கேட்க துவங்கி இருக்கிறார்களாம்; 128 கோடி மக்கள் வாழும் நாட்டில் எத்தனை லட்சம் மக்களிடம் கருத்து கேட்க போகிறார்கள்? தெரியவில்லை.

இந்தியாவில் பாஜக கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும், பொதுசிவில் சட்டம் வந்துவிட்டால், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடமுடியுமா? ஒன்றும் கிடைக்காது. அது நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டேதான் இருக்கும். காரணம் அவர்கள் கையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கை.

ஆம், காங்கிரஸ் ஆட்சியில் உரலுக்கு ஒரு பக்கம் இடி. ஆனால் பாஜக ஆட்சியில் மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி அல்லது இடி. ‘பொதுசிவில் சட்டம், ராமர் கோயில், காஷ்மீருக்கு இருக்கும் விஷேச அதிகாரம் ரத்துஇதுவே இவர்களின் தாரக மந்திரமும் பிரதான அஜண்டாவும். இவற்றோடு ஈவு இரக்கமற்ற கடின நவீன தாராளமயம் அமலாக்கமும் சேர்ந்துக் கொண்டுவிட்டது. ஆம், மக்களை பொருளாதார ரீதியில் சுரண்டிக் கொடுமைப் படுத்துவதோடு- கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில், இரட்டைக் குழல் துப்பாக்கியால் துல்லிய ஸ்டிரைக்செய்வதைத்தான் தற்போது நடந்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. விரைவில் வர இருக்கிற உபி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மீண்டும் ராமருக்கு கோவில்கட்டுவது பிரச்சனையையும் கையில் எடுக்கவும், அதற்கேற்ப தக்க சமயத்தில் துல்லிய தாக்குதலைமிக துல்லியமாக திட்டமிட்டு, மக்கள் மீது  தொடுத்திட துள்ளிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

ஒரு பக்கம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாட்டு கலாசாரத்தின் மீது தாக்குதல்; மறுபக்கம் பொருளாதார ரீதியாக தாக்குதல். ஆம், ஏற்கனவே இவர்கள் ஆண்டபோது, பொதுத்துறைகளை விற்பதெற்கென்றே தனி அமைச்சர், அமைச்சகம் அமைத்தவர்கள் என்பது இங்கே நினைவு கூற தக்கது. அதன் தொடர் வேகம் தற்போது ரொக்கைக் கட்டிபறந்து ஆரம்பித்து விட்டது. பாதுகாப்பு துறையில் துவங்கி, ரயில்வே துறை வரை பொதுத்துறை ஆலைகளை தனிமனிதனுக்கு விற்கும் தந்திர நடவடிக்கைகளை எடுத்துவிட்டது மத்திய அரசு. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் சேலம் இரும்பாலையை ஸ்சுவாகாசெய்திட கால்கோள் நிகழ்வுநடத்திவிட்டது மத்திய அரசு.

சேலத்தில் 4000 ஏக்கர் நிலப்பரப்பில் 1981இல் இரும்பாலை துவங்கப்பட்டது. இதற்கு ஒரு காரணமாக இருந்தது- அன்று சொன்னது- இந்த ஆலை இருக்கும் அருகில் இருக்கும் கஞ்சமலை. இந்த கஞ்சமலையில் இரும்பு தாது இருப்பதாகவும், அதை வெட்டி எடுத்து, இரும்பு தயாரிக்கப்படும் என்பதாகவும் கூறப்பட்டது. அதன்மூலம் சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு ஆலைகள் அமைக்கப்படும் போதும் அப்பகுதி மக்களுக்கு இப்படித்தான் ஆசை வார்த்தைகள் அள்ளி வீசப்படுகிறது. அதோடு 4000 ஏக்கர் எடுக்கப்பட்டபோது ஒவ்வொரு நிலப்பட்டாதாரிக்கும் ஆலையில், ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் நடந்ததா? அது தனிக்கதை.

கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. ‘நரி செத்தாலும், அதன் கண்கள் ஆட்டு மீதுதான் இருக்கும்என்று. இன்றைக்கு நட்டத்தில் இயங்கும் ஆலைகளை விற்கிறோமென கூறி, பொதுமக்கள் கண்களில் மண் தூவுகிறார்களே அது ஏன்? நட்டத்தில் இயங்கும் ஆலையை அரசுதானே எடுத்து நடத்திட வேண்டும்; அதற்குதானே அரசு. அப்படி செய்தால் அதை புரிந்துக் கொள்ளலாம். ஆனால் அதை தனியாருக்கு விற்றால், அதையும் தனியார் வாங்குகிறார்கள் என்றால், அவர்கள் என்ன முட்டாள்களா? அல்லது தர்மபிரபுகளா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இதற்கு இந்த இரும்பாலை கதையே போதும்.

ரூ181 கோடியில் அன்று துவங்கப்பட்டது. அது படிப்படியாக தொழிலாளர் உழைப்பு, நிர்வாக திறன் (இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும்) ஆகியவற்றால் 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ2000 கோடி முதலீட்டில் உலக தரம் வாய்ந்த உருக்காலையாக உருவாகி உள்ளது. நம் சட்டைப்பையில் இருக்கும் சில்லரை காசுகளில் இருந்து, சந்திர மண்டலத்தில் உலாவும் சந்திரான் விண்கோள் வரை தரமிக்க உலக புகழ் பெற்ற உருக்கை உருவாக்கி தந்துள்ளது. 900 குடியிருப்புகள், பொதுமருத்துவமனை, பொது நூலகம், பொது கல்விசாலை என சகல வசதிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாலையில் தற்போது 1200 நிரந்தர உழைப்பாளிகள் மற்றும் கூட்டுறவு முறையிலும், ஒப்பந்த முறையிலும் 850 உழைப்பாளர்களும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

3,000 கோடி என்பது ஆலை மதிப்பு; ஆலை இருப்பது 2500 ஏக்கர்; ஆலை இல்லாமல் இருக்கும் 1,500 ஏக்கர்; குளுகுளு ஏற்காட்டில் 10 ஏக்கர் மொத்தம் 3010 ஏக்கர் இருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ15,000 கோடி. ஆலையின்றி காலியாக இருக்கும் நிலத்தில் தேக்கு, சந்தனம் என பணப்பயிர் மனம் வீசிக் கொண்டிருக்கிறது. ‘லாபம் இல்லாதவன் ஆத்தோடு போக மாட்டான்என்பார்கள். ஆம், இரும்பைவிட உறுதியாக தேக்கு; இரும்பைவிட புகழ்மிக்க மனமனக்கும் சந்தனம்; இதெல்லாம் எங்கே கிடைக்கும்? ஆம், ‘ஆலை வாங்கினால் சோலை இலவசமாக எங்கே கிடைக்கும்? இந்தியாவைத் தவிர! ஆக மொத்ததில் கோடிக்கணக்கில் ஒரே இடத்தில் பொன்னும் பொருளும் புதைந்து கிடக்கும் இந்த புதையல்லைக் கொள்ளை அடிப்பதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

இதிலே சூழ்ச்சி என்னவென்றால், நட்டத்தில் இயங்குகிறது என சொல்வதன் சூது என்னவென்றால், அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கே ஒழிய வேறொன்றுமில்லை. இங்குள்ள சொத்து மதிப்பு ரூ15,000 கோடியை கணக்கில் காட்டாமல், ஓரிரு ஆயிரம் கோடியை மட்டும் கணக்கு காட்டிவிட்டு, அதன்பின் நூறு, இருநூறு கோடிக்கு அமுக்கிக் கொள்வதற்குதான்  நட்டம் நட்டம்என கூவுவதன் அர்த்தம். இப்பொழுது புரிகிறதா? இவர்களின் சூது!

இது இங்கு மட்டுமல்ல. இந்திய தேசம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு பொதுதுறை மற்றும் அரசுதுறை சார்ந்து சோலைகள் பூத்து குலுங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே ரியல் எஸ்டேட் பேர்வழிகளுக்கு இவைகள் யாவும் தங்கச் சுரங்கங்களே!’. அதனால்தான் ஒரு கல்லில் இரண்டு மாங்கனிஅடிக்கிறார்கள் இந்திய அன்னிய முதலாளிகள். ஆலைக்கு ஆலையும் கிடைக்கிறது; சோலைக்கு சோலையும் கிடைக்கிறதல்லவா? விடுவார்களா? இதற்கு அன்றைய காங்கிரஸ் அரசு புள்ளி வைத்தது; இன்றைய பாஜக அரசு அதை துல்லியமாக சூறையாட அல்லது ஸ்வாகா செய்திட துடிக்கிறது.

இந்திய நாட்டின் பொதுத்துறை எல்லாம் வெறும் லாப நட்டம் பார்க்கும் குமாஸ்தா தொழிலா? அல்ல! இந்தியாவின் ஆன்மா! இந்தியாவின் இதயம்! இந்திய தேசம் இந்தளவுக்கு இன்று உயர்ந்து, உலக அளவில் நெஞ்சை நிமிர்த்தி நேர்நடை போடுகிறதென்றால், எதிரிகளை துல்லியமாக சுட்டு வீழ்த்துகிறதென்றால், அல்லது துல்லிய ஸ்டிரைக்செய்கிறதென்றால், அதற்கு யார் காரணம்? இன்றைக்கும் இருக்கும், அன்றைக்கு இருந்த அரசுகளும், அவர்களின் எஜமானர்களுமா? இல்லை. இல்லவே இல்லை. இந்திய மக்களும், உழைப்பாளி வர்க்கமும்தான். இந்த இரும்பாலை போன்ற பொதுத்துறை நிறுவனங்களும்தான். அவர்களின் அயறாத உழைப்பும்தான்.

ஆம், அன்று வந்த பாஜக அரசில் பொதுத்துறையை விற்கும் பணியை ஒரு அமைச்சரும், ஒரு அமைச்சகமும் தான் செய்தார்; செய்தது. ஆனால் இன்று- இந்திய பிரதம அமைச்சரே, ஆம் பிரதமரே அத்திருப்பணியை செய்து கொண்டு வருகிறார். அவருக்கு இரண்டே இரண்டு பணிதான். ஒன்று- உலகத்தில் உள்ள ஒரு நாட்டையும் விடாமல் சென்று, அங்குள்ள முதலாளிகளை இந்தியாவுக்கு வந்து வேண்டியதை சுருட்டிக்கொண்டு செல்ல அழைப்பது; அதோடு இந்திய முதலாளிகளுக்கு அங்குள்ள சொத்துக்களைச் சுரண்டிட வாய்ப்பு வசதிகளை செய்து தருவது; இரண்டு- பன்முகம் கொண்ட பாரத தேசத்தை ஒருமுகம் கொண்ட இந்துத்துவா தேசமாக மாற்றுவது; இவற்றிக்கு எதிராக குரல் கொடுப்போரின் குரல்வளையை நசுக்குவது.

இந்த இரண்டு அம்சங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் மைய களமாக இன்று இருப்பது பொதுத்துறையும் அரசுத்துறையுமே என்றால் அது மிகையல்ல. ஆம், 2015 செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்ததின் போது சண்டமாருதம் செய்தோர் எண்ணிக்கை 10 கோடி. அது 2016 செப்டம்பர் 2 பொது வேலைநிறுத்தத்தின் போது அதன் எண்ணிக்கை 18 கோடி என பொங்கி எழுந்தனர். போர் பரணி பாடினர். இதெல்லாம் இந்த மத்திய அரசின் ஈவு இரக்கமற்ற கடின பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்த வீரபோர் அல்லவா? இதற்கு அச்சாக இருப்பதும் இருந்து வருவதும் வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, உள்ளிட்ட இதுபோன்ற பொதுதுறை அல்லவா? இதை பொறுத்துக் கொள்ளுமா ஆளும் வர்க்கம்!?

ஆகவேதான் இது உருக்காலையையோ, பொதுத்துறையையோ காக்கும் போராட்டம் அல்ல. ஒட்டு மொத்த நம் தேசத்தையும், தேச செல்வங்களையும் காக்கும் போராட்டம். நாம் போற்றி பேணி காத்து வரும் பன்முக தன்மை கொண்ட வாழ்வியலைக் காக்கும் போராட்டம். ஒற்றை கலாசாரத்திற்கு எதிராகவும், ஒட்டச்சுரண்டலுக்கு எதிராக வும்ஒற்றை மனிதனாகஎழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. ஈவு இறக்கமற்ற கடின நவீன தாராளமயச் சுரண்டலை எதிர்த்த தேசம் காக்கும் போரில் அணிதிரள்வோம். மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்தும் குருசேத்திரப் போரை திக்கெட்டும் கொண்டு செல்வோம். நம்முடைய உழைப்பில் விளைந்த செல்வங்களை, தேசத்தைக் கண் இமையாய் காப்போம்.
                                                                                      -பி.தங்கவேலு.

இது எடிட் செய்யப்பட்டு 19.01.016 தீக்கதிலில் பிரசுரமாகி  உள்ளது. தீக்கதிருக்கு நன்றி!