Sunday, 24 July 2016

அழிவின் விளிம்பில் மரவள்ளியும், ஜவ்வரிசி தொழிலும்!

••தமிழகத்தில் மரவள்ளி விவசாயம் சுமார் 20 மாவட்டங்களில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் ஒரு சிறு பணப்பயிராக இருந்து வருகிறது. இதில் கொல்லிமலை, கல்வராயன்மலை, பச்சமலை, பர்கூர்மலை, கடம்பூர்மலை போன்ற மலைவாழ் மக்களுக்கும் பயன் தரும் வகையில் மரவள்ளி பயிர் இருந்து வருகிறது.

••இந்த சூழ்நிலையில் மரவள்ளியில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி உற்பத்தியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தற்போது நிலவும் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், கீழ்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிக்கும் பொழுது தரமான ஜவ்வரிசி உற்பத்தியாகி நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்களுக்கும் அது பயன்பெறும் வகையில் அமையும்!

••ஜவ்வரிசி தயாரிக்கும் பொழுது மரவள்ளி கிழங்கு நன்றாக தோல் உரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 

••ஜவ்வரிசி விலை உயரும் பொழுது சில உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டு சேர்ந்து விலை குறைவான மக்காச்சோள மாவை மரவள்ளி கிழங்கு மாவில் கலப்படம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இப்பிரச்சனை தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதலே நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்வது FSSAI விதிகளுக்கு முரணாகும். இவ்வாறு மக்காச்சோள மாவு கலப்படம் செய்வதால் ஜவ்வரிசியின் விலை குறைந்து இதனால் மரவள்ளி விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்காமல் போய்விடுகிறது. 


••இந்த மக்காச்சோளம் மாவு கலப்படப் பிரச்சனை ஆந்திராவில் ஆரம்பித்து தற்போது தமிழகத்திலும் தலைதூக்கி உள்ளது.ஆகவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்படி கலப்படத்தைக் கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்திட வேண்டும்.

••கடந்த பல வருடங்களாக ஜவ்வரிசி தயாரிக்கும் பொழுது ரசாயனம் கலப்பதாக புகார் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 2016 ஜூன் மாதத்தில் தில்லி FSSAI சுமார் 10,000 FOOD ADDUTIVES ஐ உணவு தயாரிப்பில் அனுமதிக்கலாம் என கூறியுள்ளது. 

••ஆகவே ஜவ்வரிசி தயாரிப்பில் எந்த வகையான FOOD ADDUTIVES -ஐ உபயோகப்படுத்தலாம் என்பதை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வாயிலாக அறிவுறுத்தி ஜவ்வரிசி, ஸ்டார்ச் தொழிலை மேம்படுத்தி நுகர்வோர்கள் பயன்பெறவும், இதன்மூலம் மரவள்ளி விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவும் வழிவகை செய்ய வேண்டும்!

••தமிழக உணவுப் பாதுகாப்பு துறையில் ஜவ்வரிசியில் எந்த வகையான FOOD ADDUTIVES ஐ அறிவியல் ரீதியாக உபயோகப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுதுதான் இந்த துறையில் தற்பொழுது நடைபெற்று வரும் ஊழல் குறைந்து நேர்மையான நிர்வாகம் நடைபெறுவதோடு நுகர்வோருக்கும் தரமான ஜவ்வரிசி கிடைக்கும். 

••அதன்மூலம் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கும்! அல்லது மரவள்ளி கிழங்கை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!

••இவ்வகையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையரும், தமிழ்நாடு முதல் அமைச்சரும் உடனடியாக தலையிட்டால் தான் அழிவின் விளிம்பில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தையும், ஜவ்வரிசி தொழிலையும் ஓரளவாவது பாதுகாக்க முடியும்!
 - பி.தங்கவேலு.

(நன்றி: தீக்கதிர் நாளிதழ் 21.07.2016).

சேலம் மாநகர காவல் துறையின் கொலைவெறித்தனமானத் தாக்குதலும், 
சிபிசிஐடி விசாரனைக்கு உத்திரவிட கோருதலும், கொலையான எஸ்.வெங்கட்ராஜ் குடும்பத்திற்கு நீதியும், நியாயமும், நிவாரணமும் கோருதலும், கொலையை நேரில் பார்த்த அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு கோருதலும்.

கடந்த 17.7.16 இரவு 11 மணி அளவில்  சேலம் மாநகரத்தில் மரவனேரி பகுதியில் சேலம் மாநகர அஸ்தம்பட்டி போலீசு குணச்சீலன், ஊர்காவல் படை காவலர் பெலிங்ராஜா  உள்ளிட்டோர் ஆகியோர் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சேலம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யோத்தியாப்பட்டிணம் வீராணம் என்ற ஊரைச் சார்ந்த எஸ்.வெங்கட்ராஜ் (வயது 25) \பெ சுபாஷ் இருச்சக்கர வாகணத்தில் சேலம் ஜங்ஷனில் உறவினரை ரயிலேற்றிவிட்டுவீட்டுக்கு வந்துள்ளார்.

அவரை ஊர்காவல் படை காவலர் பெலிங்ராஜா  லத்தியை காட்டி நிறுத்தி உள்ளார்; எஸ்.வெங்கட்ராஜ் பைக்கை நிறுத்துவதற்குள் அவரது தலையின் பின்புறம் ஓங்கி லத்தியால் அடித்துள்ளார்; நிலை தடுமாறி நிற்கிற சமயத்தில் முகத்தில் மூக்கின் மீது தனது லத்தியால் போலீசு குணச்சீலனும் அடித்து உள்ளார். இருவரும் பலம் கொண்டு லத்திகளால் தாக்கியதால், பைக்கோடு விழுந்து, அதே இடத்தில், அந்த நிமிடத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. இரு போலீசுகார்களும் தனது லத்திகளால் கண்மூடித்தனமாக தாக்கியதாலேயே அவர் மரணம் அடைந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, உயிருக்கு போராடிய நிலையில் உரிய முறையில் அவர் உயிரை பாதுக்காக்க, அங்கிருந்தவர்கள் கெஞ்சிக கேட்டும் மிகவும் மெத்தமாகவே இருந்து உள்ளனர். அதன்பின் மிகவும் சகவாசமாக ஒர ஆட்டோ மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் "வேகத்தடையில் விழுந்து செத்துவிட்டான்" என வழக்கை ஜோடித்து விட்டார்கள். இந்த கொலைபாதக செயலுக்கு போலீசின் கையாளான ஆட்டோ ஓட்டுனர் கணேசன் (வயது 40) \பெ மாணிக்கம் உதவி உள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறிக் கொண்டு தாக்கியச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது!

இந்நிலையில் 22.7.16 மதியம் எஸ்.வெங்கட்ராஜ் பெற்றோரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோதுதான் மறைக்கப்பட்ட இந்த அதிர்ச்சியான உண்மை வெளியே தெரிய வந்துள்ளது.
மறைந்த எஸ்.வெங்கட்ராஜை போலீசு தங்களது லத்தியால் அடித்தே கொன்று உள்ளார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கீழே தரப்படுகிறது.


1. 18.7.16 அன்று ஏற்கனவே பல பிரேதங்கள் பரிசோதனைக்கு இருந்த நிலையில் இதை மட்டும் அவசர அவசரமாக பிரேதப்பரிசோதனை செய்து காவல்துறை வாங்கியது ஏன்?
2. பெற்றோரிடம் பிரேதத்தை தராமல் காவல்துறையே எரித்ததேன்?
3. வீராணம் மயாணத்தில் சொந்த ஊரில் பிரேதத்தை அடக்கம் செய்யாமல் சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள சேலம் காக்காயன்காடு எரியூட்டு மயாணத்தில், சேலம் மாநகரத்தில் காவல்துறையே கொண்டு வந்து எரியூட்டியதேன்?
4. காவல்துறை அடித்துக்கொன்ற சம்பவத்தை நேரில் பார்த்த திரு.அருண்குமார் என் இளைஞனின் வாக்குமூலம் நேரில் அன்றிரவே அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. விதுன்குமார் அவர்களிடம் கூறியும் ஏன் அதை எடுத்துக் கொள்ளவில்லை?
5. நேரில் பார்த்த திரு அருண்குமார் 19.7.16 அன்று எஸ்.வெங்கட்ராஜ் பெற்றோருடன் சேலம் மாநகர அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையரியிடம் நேரில் தந்த வாக்குமூலம் மற்றும் புகாரை காவல்துறைக் கண்டு கொள்ளாததேன்?
6. காவலர்கள் திரு.குணசீலனை ஆயுத படைக்கு மாற்றியதும், ஊர்காவல் படை காவலர் திரு.பெலிங்ராஜாவை நீக்கம் செய்ததும் ஏன்?
7. நேரில் பார்த்த திரு அருண்குமார் காலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சம்மந்தப்பட்ட போலீகாரர்கள் திருவாளர் குணசீலன், பெலிங்ராஜா ஆகியோர் எங்களை காப்பாற்று, காட்டிக் கொடுத்துவிடாதேஎன்று காலில் விழுந்து கதறியதேன்?
8. நடந்தது விபத்தென்றால், பிரேத பரிசோதனை முதல் எரியூட்டும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு வீராணம் கிராமத்திலும், மருத்துவமனையிலும், சேலம் காக்காயன் சுடுக்காட்டிலும், பிரேதத்துடனும் இருந்ததேன்?
9. பெற்றோரின் விருப்பப்படி சமூக வழக்கப்படி சொந்த ஊரில் புகைக்க அனுமதிக்காததேன்?
10. வேகத்தடையில் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதி அடிபட்டதாக போலீஸ் கூறுகின்றனர்; அப்படியானால் வேகத்தடைக்கும் அடிபட்ட மின் கம்பத்திற்கும் 125 அடி தூரம் உள்ளபொழுது எப்படிஅப்படிஅடிபட்டுசாகமுடியும்?
11. கொலையை நேரில் பார்த்த இளைஞர் திரு.அருண்குமார்  கொடுத்த புகாரை பதிவு செய்யாமல் விபத்து என்று போலீஸ் எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது?

இப்படி பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. கொலையை மூடி மறைத்து, கொலையாளிகளைப் பாதுக்காத்திட மாநகர காவல் உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் அரசுக்கும்போலீசுக்கும் அவப்பெயர் வந்துவிடக்கூடாது என திட்டமிட்டு மறைத்துள்ளனர் என்பதுதான் உண்மை!

சம்பவம் நடந்த பகுதி ஆர்எஸ்எஸ் அலுவலகம் இருப்பதாலும், பாலமந்திர் பள்ளிக்கூடம் நுழைவாயில் என்பதாலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது; இந்த கேமராக்களையும், சேலம் அரசு மருத்துவமனை கேமராக்களையும், அஸ்தம்பட்டி காவல்நிலைய கேமராக்களையும் சோதித்தால், நேரில் பார்த்துவிட்டு, பதறிபோய் போராட்டிய  திரு. அருண்குமார் அவர்களையும் விருப்பு வெறுப்பின்றி முறையாக விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்!
ஆகவே-
1. சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட்டு, முழுமையான விசாரணை நடத்தி, கொலைக் குற்றவாளிகள் மீதும், அதற்கு உடைந்தையாக இருந்தவர்கள் மீதும் சட்டப்படி  உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தண்டனைக்கு உள்ளாக்கிட வேண்டும்!
2. நேரில் பார்த்த திரு அருண்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
3. தங்களது ஒரே மகனை போலீசின் தாக்குதல்களுக்கு பலி கொடுத்துவிட்டு, பரிதவிக்கும் சுரேஷ் குடும்பத்திற்கு நீதியும், நியாயமும், நிவாரணமும் வழங்கிட வேண்டும். 
-பி.தங்கவேலு

சேலம் மாநகர காவல் துறையின் கொலைவெறித்தனமானத் தாக்குதலும், 
சிபிசிஐடி விசாரனைக்கு உத்திரவிட கோருதலும், கொலையான எஸ்.வெங்கட்ராஜ் குடும்பத்திற்கு நீதியும், நியாயமும், நிவாரணமும் கோருதலும், கொலையை நேரில் பார்த்த அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு கோருதலும்.

கடந்த 17.7.16 இரவு 11 மணி அளவில்  சேலம் மாநகரத்தில் மரவனேரி பகுதியில் சேலம் மாநகர அஸ்தம்பட்டி போலீசு குணச்சீலன், ஊர்காவல் படை காவலர் பெலிங்ராஜா  உள்ளிட்டோர் ஆகியோர் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சேலம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யோத்தியாப்பட்டிணம் வீராணம் என்ற ஊரைச் சார்ந்த எஸ்.வெங்கட்ராஜ் (வயது 25) \பெ சுபாஷ் இருச்சக்கர வாகணத்தில் சேலம் ஜங்ஷனில் உறவினரை ரயிலேற்றிவிட்டுவீட்டுக்கு வந்துள்ளார்.

அவரை ஊர்காவல் படை காவலர் பெலிங்ராஜா  லத்தியை காட்டி நிறுத்தி உள்ளார்; எஸ்.வெங்கட்ராஜ் பைக்கை நிறுத்துவதற்குள் அவரது தலையின் பின்புறம் ஓங்கி லத்தியால் அடித்துள்ளார்; நிலை தடுமாறி நிற்கிற சமயத்தில் முகத்தில் மூக்கின் மீது தனது லத்தியால் போலீசு குணச்சீலனும் அடித்து உள்ளார். இருவரும் பலம் கொண்டு லத்திகளால் தாக்கியதால், பைக்கோடு விழுந்து, அதே இடத்தில், அந்த நிமிடத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. இரு போலீசுகார்களும் தனது லத்திகளால் கண்மூடித்தனமாக தாக்கியதாலேயே அவர் மரணம் அடைந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, உயிருக்கு போராடிய நிலையில் உரிய முறையில் அவர் உயிரை பாதுக்காக்க, அங்கிருந்தவர்கள் கெஞ்சிக கேட்டும் மிகவும் மெத்தமாகவே இருந்து உள்ளனர். அதன்பின் மிகவும் சகவாசமாக ஒர ஆட்டோ மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் "வேகத்தடையில் விழுந்து செத்துவிட்டான்" என வழக்கை ஜோடித்து விட்டார்கள். இந்த கொலைபாதக செயலுக்கு போலீசின் கையாளான ஆட்டோ ஓட்டுனர் கணேசன் (வயது 40) \பெ மாணிக்கம் உதவி உள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறிக் கொண்டு தாக்கியச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது!

இந்நிலையில் 22.7.16 மதியம் எஸ்.வெங்கட்ராஜ் பெற்றோரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோதுதான் மறைக்கப்பட்ட இந்த அதிர்ச்சியான உண்மை வெளியே தெரிய வந்துள்ளது.
மறைந்த எஸ்.வெங்கட்ராஜை போலீசு தங்களது லத்தியால் அடித்தே கொன்று உள்ளார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கீழே தரப்படுகிறது.

1. 18.7.16 அன்று ஏற்கனவே பல பிரேதங்கள் பரிசோதனைக்கு இருந்த நிலையில் இதை மட்டும் அவசர அவசரமாக பிரேதப்பரிசோதனை செய்து காவல்துறை வாங்கியது ஏன்?
2. பெற்றோரிடம் பிரேதத்தை தராமல் காவல்துறையே எரித்ததேன்?
3. வீராணம் மயாணத்தில் சொந்த ஊரில் பிரேதத்தை அடக்கம் செய்யாமல் சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள சேலம் காக்காயன்காடு எரியூட்டு மயாணத்தில், சேலம் மாநகரத்தில் காவல்துறையே கொண்டு வந்து எரியூட்டியதேன்?
4. காவல்துறை அடித்துக்கொன்ற சம்பவத்தை நேரில் பார்த்த திரு.அருண்குமார் என் இளைஞனின் வாக்குமூலம் நேரில் அன்றிரவே அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. விதுன்குமார் அவர்களிடம் கூறியும் ஏன் அதை எடுத்துக் கொள்ளவில்லை?
5. நேரில் பார்த்த திரு அருண்குமார் 19.7.16 அன்று எஸ்.வெங்கட்ராஜ் பெற்றோருடன் சேலம் மாநகர அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையரியிடம் நேரில் தந்த வாக்குமூலம் மற்றும் புகாரை காவல்துறைக் கண்டு கொள்ளாததேன்?
6. காவலர்கள் திரு.குணசீலனை ஆயுத படைக்கு மாற்றியதும், ஊர்காவல் படை காவலர் திரு.பெலிங்ராஜாவை நீக்கம் செய்ததும் ஏன்?
7. நேரில் பார்த்த திரு அருண்குமார் காலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சம்மந்தப்பட்ட போலீகாரர்கள் திருவாளர் குணசீலன், பெலிங்ராஜா ஆகியோர் எங்களை காப்பாற்று, காட்டிக் கொடுத்துவிடாதேஎன்று காலில் விழுந்து கதறியதேன்?
8. நடந்தது விபத்தென்றால், பிரேத பரிசோதனை முதல் எரியூட்டும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு வீராணம் கிராமத்திலும், மருத்துவமனையிலும், சேலம் காக்காயன் சுடுக்காட்டிலும், பிரேதத்துடனும் இருந்ததேன்?
9. பெற்றோரின் விருப்பப்படி சமூக வழக்கப்படி சொந்த ஊரில் புகைக்க அனுமதிக்காததேன்?
10. வேகத்தடையில் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதி அடிபட்டதாக போலீஸ் கூறுகின்றனர்; அப்படியானால் வேகத்தடைக்கும் அடிபட்ட மின் கம்பத்திற்கும் 125 அடி தூரம் உள்ளபொழுது எப்படிஅப்படிஅடிபட்டுசாகமுடியும்?
11. கொலையை நேரில் பார்த்த இளைஞர் திரு.அருண்குமார்  கொடுத்த புகாரை பதிவு செய்யாமல் விபத்து என்று போலீஸ் எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது?

இப்படி பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. கொலையை மூடி மறைத்து, கொலையாளிகளைப் பாதுக்காத்திட மாநகர காவல் உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் அரசுக்கும்போலீசுக்கும் அவப்பெயர் வந்துவிடக்கூடாது என திட்டமிட்டு மறைத்துள்ளனர் என்பதுதான் உண்மை!

சம்பவம் நடந்த பகுதி ஆர்எஸ்எஸ் அலுவலகம் இருப்பதாலும், பாலமந்திர் பள்ளிக்கூடம் நுழைவாயில் என்பதாலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது; இந்த கேமராக்களையும், சேலம் அரசு மருத்துவமனை கேமராக்களையும், அஸ்தம்பட்டி காவல்நிலைய கேமராக்களையும் சோதித்தால், நேரில் பார்த்துவிட்டு, பதறிபோய் போராட்டிய  திரு. அருண்குமார் அவர்களையும் விருப்பு வெறுப்பின்றி முறையாக விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்!
ஆகவே-
1. சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட்டு, முழுமையான விசாரணை நடத்தி, கொலைக் குற்றவாளிகள் மீதும், அதற்கு உடைந்தையாக இருந்தவர்கள் மீதும் சட்டப்படி  உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தண்டனைக்கு உள்ளாக்கிட வேண்டும்!
2. நேரில் பார்த்த திரு அருண்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
3. தங்களது ஒரே மகனை போலீசின் தாக்குதல்களுக்கு பலி கொடுத்துவிட்டு, பரிதவிக்கும் சுரேஷ் குடும்பத்திற்கு நீதியும், நியாயமும், நிவாரணமும் வழங்கிட வேண்டும். 
-பி.தங்கவேலு

Tuesday, 12 July 2016

தமிழ் நாடன்
   ------***------
தமுஎகச சேலம் மாவட்ட கௌரவ தலைவர் இலா.வின்சென்ட் எழுதி நூலாக வந்துள்ளது “தமிழ்நாடன்”. இது ஓர் அரிய நூல் என்றுதான் சொல்ல வேண்டும். 

சாதாரண ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில், மிகவும் பின் தங்கிய கிராமத்தில் பிறந்து உலகையே தனது உள்ளங்கையில் வைத்து, வினையாற்றுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவே இக்காலத்தில்! அதுவும்- இலக்கியம், பண்பாடு, கலை, கலாச்சாரம் என பன்முக தளத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவர்கள்… அதிலும், தன் சுயமுயற்சியில், தன்னை உயரிய விருதாம் சாகித்திய விருது பெறும் அளவுக்கு உயர்ந்தவர்கள் மிகமிக சிலரே..! அந்த வரிசையில் தமிழ்நாடன்! அதிலும் அவர்- சேலம் போன்ற வறண்ட பிரதேசங்களில் இப்படியொரு எழுத்தாளுமை உருவாகி வருதல் அரிதிலும் அரிதே! 

1943இல் பிறந்து 2013இல் மறைந்த காலம் என்பது- இலக்கிய உலகில் வானம்பாடி கவிஞர்கள் சிறகடித்து பறந்த காலம். அவர்களோடு ஒட்டியும், வெட்டியும் வாழ்ந்த தமிழ்நாடனின் வாழ்க்கையை இந்த நூல் மிக நேர்த்தியாக வடிவமைத்து,  ஒரு வரலாற்று பெட்டகமாகவே பரிமாறி இருக்கிறார் எழுத்தாளர் இலாவி என்றழைக்கப்படும் இலா.வின்சென்ட்.

கவிதை, கட்டுரை, கவிதையிலான கட்டுரை, ஆய்வு கட்டுரைகள், நாவல், உரைநடை, நாடகம், நூல்கள் தொகுப்பு, மொழிபெயர்ப்பு, தொல்லியல் ஆய்வு, ஓவியம் என இவர் கால்பதித்த தடங்கள் வாசிப்போரை பிரமிக்க வைக்கும் என்பது திண்ணம். அவற்றில் ஒரிரு மட்டுமே சுவைக்க இதோ—

"நாங்கள் வானம்பாடிகள்
மானுட கானம்பாடிகள்- உழைப்பு
ஞானம் பாடிகள்” (பக் 27)

‘வேம்பு’ தலைப்பு… அவரின்  கவிதையில் தாழ்த்தப்பட்ட மக்களின்  உரிமைக்குக் குரல் இதோ---
“ராஜாவே
விழி!
அக்கிக்குண்டம் ஆகட்டும் உன்
விழி!” (பக் 27)

“வருண பேதத்தைப் புதைத்துவிடு
வர்க்கப் போதனைக்கு உயிர் ஊட்டு
நீ கூவு ராஜாவே
‘அரிஜன் அல்ல நான்
மனுசன்' " (பக் 27-28)

இதோ… வெண்மணி தீ கண்டு வெகுண்டெழுவதைப் பார்…
“ராஜாவே
எழு
ஆணையிடு
தோழர்கள் கூடட்டும்   
தோக்குகள் பாடட்டும்”  (பக்-28)

சேலம் நாடாளுமன்ற உறுப்பினரை உறுத்தியதால், நாற்பது மைல்களுக்கு அப்பால் விரட்டி அடிக்கப்பட்ட … ஆம், இவருக்கு பணி மாறுதல் பரிசு தந்த கவிதை இதோ…

“காலம் வந்தால்
சட்டை கழற்றும் பாம்பு
காசு வந்தால்
சட்டை மாற்றுவார் எங்கள் எம்பி”  (பக்- 33)

நாட்டுப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு…
"பகத்சிங் உயிர் உறிஞ்சிய
தூக்குக் கயிற்றைத் தேடிக்கொடு
வீரக் குருதியில் நனைந்த
அதனை முத்தமிடுகிறேன்” ( பக்-53)

ரஷ்யபுரட்சியை ருசிக்கிறார் பாருங்கள்…
“உனது பதாகை
புதுமனிதனின் புதுரத்தம்
இலச்சினை
என் வர்க்கத்தின் வலிய காவல்”

இந்த நூலை படித்து முடித்ததும் என்னை என் மனம் குற்ற உணர்வால், வாட்டி வதைத்தது; காரணம் அவரின் பிறந்த மண்ணும், நான் பிறந்த மண்ணும் ஒன்றே!  ஆம், இத்தகைய ஆளுமையோடு நட்பு வட்டாரத்தில் இல்லாமல் இருந்தாலும்,  அவரின் இறுதி யாத்திரை நிகழ்வில்கூட கலந்துக்கொள்ளாமல் போய் விட்டோமேயென்றுதான்! 

ஆம், ஒன்றுபட்ட சேலம் மாவட்டம் தான் அவரின், எனதின் பிறந்த மண்! இப்படி ஒரு உலகம் போற்றும் ஆளுமையுடன் பரிச்சியம் இல்லாமல் போனது எமது வாழ்வில் ஒரு துர்பாக்கியமே என்றால் மிகையன்று.

உலக மொழிகளில் இருந்து சுமார் 700 கவிதைகளை தமிழுக்குக் காணிக்கையாக்கி உள்ளார்; இது இமாலய சாதனை அல்லவா? படைப்பாளிகளுக்கு தான் சுயமாக ஒன்றை படைப்பதைக் காட்டிலும், வேறு மொழியில் இருந்து தாய்மொழிக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல! அது ஒரு தவம்! 

அதுபோல் இது போன்ற ஆளுமைகளின் சுயசரிதையை சுருக்கமாக வடித்தெடுப்பதும் அத்தனை எளிதல்ல; அதை மிக அருமையாக செய்து முடித்திருக்கிறார் எழுத்தாளர் இலாவி.

கரடுமுரடான ஒரு விசயத்தைக்கூட, கலகலப்பாக சொல்லும் கலை எல்லோருக்கும் வசப்பட்டுவிடுவதில்லை. ஆம், நேரில் பேசும்போதும், அவரின் படைப்புகளை வாசிக்கும் போதும், கிடைக்கும் சுகம் இருக்கிறதே… அது மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் என்பார்களே… அதுதான் இலாவி. அவரின் நடை அருவிபோல், சலசலவென தெளிந்த நீராக ஓடுவது இந்த நூல் வாசிப்புக்கு மிக உந்துவிசையாக இருக்கிறது என்றால் மிகையல்ல! 

இந்நூல் சாகித்திய அகாதமி வெளியிட்டு இருப்பது மிகுந்த சிறப்பே! இது இன்றைய இளைஞர்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டிய நூல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை; என்றாலும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் வரிசையில் “தமிழ்நாடன்”

நூலாசிரியர் கூறுகிறார்— "தமிழ்நாடன் நம்மிடையே பலவித கருத்துக்களை விதைத்துள்ளார். அவற்றில் ஒன்று “பொய்மைக்கு ஏவல் செய்து வாழ்வதைவிட உண்மையிடத்துப் போரிட்டுச் சாகலாம்” என்பது. இதைப் படைப்பாளர் உணர்வுகளிலும், மக்கள் மனங்களிலும் பதிய வைப்பதே நமது கடமையென்று கருதுகிறேன்”.  

ஆம், நூலாசிரியர் கூறுவதைப்போல் அனைவரது மனங்களிலும் பதிய வேண்டிய நூல் இது என்றால் மிகையன்று! இந்திய இலக்கிய சிற்பிகளை பெற்றெடுத்த மண் சேலமும் ஒன்றென்பதில் இயற்கையாகவே மனம் பூரிப்படைகிறது; ஆம், அது எமக்கு மட்டுமல்ல; வாசிக்கும் அனைவருக்குமே!
                                                                                                                                 -பி.தங்கவேலு.
#
(நூல் வெளியீட்டு விழா சேலம் தமிழ்ச்சங்கத்தில் 8.7.16 மாலைப் பொழுதில் நடைபெற்றது. ஏராளமான எழுத்தாளர்கள் பங்கேற்ற விழா இனிதே நடந்தேறியது! நூல் விலை ரூ 50/; விற்பனை அலுவலகம்: சாகித்திய அகாதெமி 'இரவீந்திர பவன்', 35, பெரோஸ்ஷா சாலை, புதுதில்லி-01)
#
தொடர்புக்கு: எழுத்தாளர் இலாவி., கைபேசி: 94437 31435.